சென்னை: திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வுப் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று மாலை கூடுகிறது பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.
திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகம் முன்பு நடக்கும் இந்த போராட்டம் தினமும் ஒரு வடிவில் தொடர்கிறது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளன. இதில் 9 சங்கங்களில் தினக்கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் 50 சதவீதம் சம்பள உயர்வு கேட்கிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு தயாராக இல்லை. தொழிலாளர்கள் போராட்டத்தால் சினிமா ஸ்டிரைக் ஏற்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்த நிலையில் சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று மாலை பெப்சியின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில் நடக்கிறது.
இதில் சம்பள உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகம் முன்பு நடக்கும் இந்த போராட்டம் தினமும் ஒரு வடிவில் தொடர்கிறது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 23 சங்கங்கள் உள்ளன. இதில் 9 சங்கங்களில் தினக்கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் 50 சதவீதம் சம்பள உயர்வு கேட்கிறார்கள்.
ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு தயாராக இல்லை. தொழிலாளர்கள் போராட்டத்தால் சினிமா ஸ்டிரைக் ஏற்பட்டு படப்பிடிப்புகள் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்த நிலையில் சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை பற்றி விவாதிக்க இன்று மாலை பெப்சியின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில் நடக்கிறது.
இதில் சம்பள உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment