புலம்பெயர் மக்களுக்கு அறிவுரையோ ஆலோசனையே சொல்ல தகுதி உள்ளதா என முதலில் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளட்டும். விளையாட்டையும் அரசியலையும் கலக்க வேண்டாம் என எமக்கு அறிவுரை கூறும் புத்திஜீவிகள் முதலில் முரளிக்கு அறிவுரை கூறட்டும்.
முத்தையா அவர்களின் திறமையான விளையாட்டை உலகமே மெச்சுகின்றது நாமும் அதற்காக மகிழ்கின்றோம் நீங்கள் சிங்கள தேசத்தின் விளையாட்டுக்கு மட்டும் விசுவாகமாக இருங்கள் போதும். தமிழர்களின் சாபங்களுக்கு ஆளாக வேண்டாம்.
தமிழர்கள் ஒரு போதும் உங்களை சிங்கள அணியை விட்டு விலகி வரச்சொல்லி கேட்டதில்லை. உங்களுடன் சோர்த்து ஒட்டுமொத்த அணியையுமேதான் நாம் புறக்கணிக்கின்றோம். இறுதியாக முத்தையா முரளிதரன் அவர்களுக்கு நாம் சொல்வது புலம்பெயர் மக்களை நோக்கி உங்கள் சுழல்ப் பந்தை வீசாதீர்கள்
No comments:
Post a Comment