ஒருவழியாக பிரபு தேவா - ரம்லத்துக்கு இன்று விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றம்.
15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத்தை காதலித்து மணந்தார் பிரபு தேவா. அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தான்.
அந்த நேரத்தில்தான் பிரபுதேவாவுக்கும் அவரது இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா பேட்டியளித்ததால், கொதிப்படைந்த ரம்லத் நீதிமன்றம் போனார். ஆனால் ரம்லத் தனது மனைவியே அல்ல என வாதிட பிரபுதேவா தயாரானதால், வேறு வழியின்றி பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்தார் ரம்லத்.
ரம்லத்துக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைக்க சம்மதித்தார் பிரபுதேவா. இந்த நடைமுறைகள் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கில் இன்று பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நலநீதிமன்றம்.
15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத்தை காதலித்து மணந்தார் பிரபு தேவா. அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் மூத்த மகன் புற்றுநோயால் மரணமடைந்தான்.
அந்த நேரத்தில்தான் பிரபுதேவாவுக்கும் அவரது இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக பிரபுதேவா பேட்டியளித்ததால், கொதிப்படைந்த ரம்லத் நீதிமன்றம் போனார். ஆனால் ரம்லத் தனது மனைவியே அல்ல என வாதிட பிரபுதேவா தயாரானதால், வேறு வழியின்றி பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்தார் ரம்லத்.
ரம்லத்துக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைக்க சம்மதித்தார் பிரபுதேவா. இந்த நடைமுறைகள் கடந்த வாரம் முடிந்ததைத் தொடர்ந்து, பிரபு தேவாவும் ரம்லத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த வழக்கில் இன்று பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நலநீதிமன்றம்.
No comments:
Post a Comment