இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிககவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை, எதிர்பார்த்த அளவில் வலுவானதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
அந்தத் தீர்மான வரைவில், இலங்கை அரசுக்கு எதிராக குறிப்பிடத்தக்க விமர்சனம் ஏதும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
முன்னதாக, அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவு என்ற பெயரில் லீக் ஆன அறிக்கையில், இலங்கைக்கு எதிரான அம்சங்கள் தீவிரத் தன்மை மிகுந்து காணப்பட்டதும் இங்கே கவனத்துக்குரியது. (நகல்கள் - கீழே தரப்பட்டுள்ளது)
அமெரிக்க தீர்மானத்தின் விவரம்:
பயங்கரவாத்ததுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அந்தக் குறிப்பிட்ட நாடு, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் அதுதொடர்பான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று தனது தீர்மான வரைவில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
'இலங்கை அரசால் அமைக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (LLRC) பரிந்துரைகள், அந்நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும்.
சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடந்தது; பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பாக நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும்; வடக்குப் பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும்; அத்துடன், அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அதேவேளையில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விஷயங்களை, இலங்கை அரசால் அமைக்கப்பட்ட LLRC சரியாக ஆராயவில்லை என்று அமெரிக்கா தனது தீர்மான வரைவில் கவலை வெளியிட்டுள்ளது.
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய சட்டரீதியான கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
2. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து ஆராயவும் இலங்கை அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்க முடிவு செய்துள்ள நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
3. இத்தகைய் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வழங்க வேண்டும். அதனை, இலங்கை அரசு ஏற்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கேட்கிறது. அத்துடன், அத்தகைய உதவி வழங்குவது குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 22-வது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை அமெரிக்கா கோருகிறது.
வரைவு அறிக்கை வலுவற்றதாக திருத்தப்பட்டதா?
அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் மேற்குறிப்பிட்ட 3 அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படிருக்கலாம் என இலங்கைத் தமிழர் ஆதரவு ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தனது தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக, இரண்டு வாரங்களுக்கு முன்னர், அந்தத் தீர்மான வரைவின் விவரம், சில ஊடங்களால் 'லீக்' செய்யப்பட்டது.
அப்படி கசியவிடப்பட்ட அந்தத் தீர்மான வரைவில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமானதும் நம்பகத்தன்மையானதுமான விசாரணைகளை, அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்கா தனது ஏமாற்றத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழுகின்றன வடக்குப் பகுதியை மட்டுமே குறிப்பிட்டுள்ளதே தவிர, கிழக்குப் பகுதி சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் குறைகூறப்படுகிறது. அத்துடன், இலங்கையின் அரசியல் தீர்வுக்கும், போர்க்குற்ற விசாரணைக்கும் உரிய அழுத்தங்களை அமெரிக்கா பதிவு செய்யவில்லை என்றும் தமிழர்களால் ஏமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இலங்கைக்கு எதிரான தீர்மானமல்ல'
அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்தரன் கூறுகையில், "ஜெனிவாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமல்படுத்துவது தொடர்பாகவே பேசுகிறது. இது, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் அல்ல," என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் புரிந்த இலங்கை அரசை, சர்வதேச சமூகம் முன்பு நிற்கவைத்துள்ள வகையில், அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்றே ஆகவேண்டும் என்றும் தமிழர்கள் மத்தியில் வலுவான கருத்து நிலவுகிறது.
'தீர்மானத்தை வலுப்படுத்தவும் வாய்ப்புண்டு'
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில், "இந்தத் தீர்மான வரைவை, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடுகளால் வலுப்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ முடியும்," என்றார்.
இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வது அல்லது முறியடிப்பதற்கு இலங்கை அரசு முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், சுதந்திரமான அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் வகையிலான தீர்மானத்தையே தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 2 நாடுகளின் ஆதரவே தேவை...
ஜெனிவா மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில், இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அரசும் துரிதம் காட்டி வருகிறது.
தற்போதையச் சூழலில், அமெரிக்காவின் தீர்மானத்தை தாங்கள் ஆதரிப்பதாக 22 நாடுகள் கூட்டாக பகிரங்கமாக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளுள், 24 நாடுகளின் ஆதரவு இருந்தால், இந்த் தீர்மானம் நிறைவேறும் என்பதால், இன்னும் 2 நாடுகளின் ஆதரவு கிடைத்தாலே போதுமானதாக தெரிகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளபோதிலும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
அந்தத் தீர்மான வரைவில், இலங்கை அரசுக்கு எதிராக குறிப்பிடத்தக்க விமர்சனம் ஏதும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
முன்னதாக, அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவு என்ற பெயரில் லீக் ஆன அறிக்கையில், இலங்கைக்கு எதிரான அம்சங்கள் தீவிரத் தன்மை மிகுந்து காணப்பட்டதும் இங்கே கவனத்துக்குரியது. (நகல்கள் - கீழே தரப்பட்டுள்ளது)
அமெரிக்க தீர்மானத்தின் விவரம்:
பயங்கரவாத்ததுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அந்தக் குறிப்பிட்ட நாடு, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் அதுதொடர்பான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று தனது தீர்மான வரைவில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
'இலங்கை அரசால் அமைக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (LLRC) பரிந்துரைகள், அந்நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும்.
சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடந்தது; பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பாக நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும்; வடக்குப் பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும்; அத்துடன், அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அதேவேளையில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விஷயங்களை, இலங்கை அரசால் அமைக்கப்பட்ட LLRC சரியாக ஆராயவில்லை என்று அமெரிக்கா தனது தீர்மான வரைவில் கவலை வெளியிட்டுள்ளது.
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய சட்டரீதியான கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
2. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து ஆராயவும் இலங்கை அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்க முடிவு செய்துள்ள நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
3. இத்தகைய் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வழங்க வேண்டும். அதனை, இலங்கை அரசு ஏற்கவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கேட்கிறது. அத்துடன், அத்தகைய உதவி வழங்குவது குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 22-வது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை அமெரிக்கா கோருகிறது.
வரைவு அறிக்கை வலுவற்றதாக திருத்தப்பட்டதா?
அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் மேற்குறிப்பிட்ட 3 அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படிருக்கலாம் என இலங்கைத் தமிழர் ஆதரவு ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தனது தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக, இரண்டு வாரங்களுக்கு முன்னர், அந்தத் தீர்மான வரைவின் விவரம், சில ஊடங்களால் 'லீக்' செய்யப்பட்டது.
அப்படி கசியவிடப்பட்ட அந்தத் தீர்மான வரைவில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமானதும் நம்பகத்தன்மையானதுமான விசாரணைகளை, அந்நாட்டு அரசு மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்கா தனது ஏமாற்றத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், தற்போது அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழுகின்றன வடக்குப் பகுதியை மட்டுமே குறிப்பிட்டுள்ளதே தவிர, கிழக்குப் பகுதி சுட்டிக்காட்டப்படவில்லை என்றும் குறைகூறப்படுகிறது. அத்துடன், இலங்கையின் அரசியல் தீர்வுக்கும், போர்க்குற்ற விசாரணைக்கும் உரிய அழுத்தங்களை அமெரிக்கா பதிவு செய்யவில்லை என்றும் தமிழர்களால் ஏமாற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இலங்கைக்கு எதிரான தீர்மானமல்ல'
அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்தரன் கூறுகையில், "ஜெனிவாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம், இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமல்படுத்துவது தொடர்பாகவே பேசுகிறது. இது, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் அல்ல," என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் புரிந்த இலங்கை அரசை, சர்வதேச சமூகம் முன்பு நிற்கவைத்துள்ள வகையில், அமெரிக்காவின் தீர்மானத்தை வரவேற்றே ஆகவேண்டும் என்றும் தமிழர்கள் மத்தியில் வலுவான கருத்து நிலவுகிறது.
'தீர்மானத்தை வலுப்படுத்தவும் வாய்ப்புண்டு'
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் குறித்து நாடு கடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில், "இந்தத் தீர்மான வரைவை, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடுகளால் வலுப்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ முடியும்," என்றார்.
இந்தத் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வது அல்லது முறியடிப்பதற்கு இலங்கை அரசு முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், சுதந்திரமான அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் வகையிலான தீர்மானத்தையே தாங்கள் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 2 நாடுகளின் ஆதரவே தேவை...
ஜெனிவா மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில், இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றுவதற்காக அமெரிக்க அரசும் துரிதம் காட்டி வருகிறது.
தற்போதையச் சூழலில், அமெரிக்காவின் தீர்மானத்தை தாங்கள் ஆதரிப்பதாக 22 நாடுகள் கூட்டாக பகிரங்கமாக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளுள், 24 நாடுகளின் ஆதரவு இருந்தால், இந்த் தீர்மானம் நிறைவேறும் என்பதால், இன்னும் 2 நாடுகளின் ஆதரவு கிடைத்தாலே போதுமானதாக தெரிகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளபோதிலும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்த தீர்மான வரைவின் நகல்:
அமெரிக்கா தயாரித்துள்ளதாக 2 வாரங்களுக்கு முன்பு வெளியானதாக கூறப்படும் 'லீக்' ஆன வரைவின் நகல்:
-Vikatan
No comments:
Post a Comment