தேவயானி தனது சம்பாத்தியத்தில் கணவர் ராஜகுமாரனை மீண்டும் இயக்குனராக்கிய படம் திருமதி தமிழ். கீர்த்தி சாவ்லா ஓரளவு கீர்த்தியுடன் இருந்தபோது தொடங்கப்பட்டது. இப்போது கீர்த்தி சாவ்லா என்றால் கல்பனா சாவ்லாவின் தங்கையா என்று கேட்பார்கள்.
திருமதி தமிழில் ஹீரோ ராஜகுமாரன். சரி, கொடுமைதான். அதுக்காக முழுக்கதையையும் கேட்காமல் ஓடினால் எப்படி. ராஜனுமாரனுக்கு ஜோடி கீர்த்தி என்றாலும் படத்தின் தூண் மாதிரியான கேரக்டர் தேவயானிக்கு. இந்த குடும்ப கூட்டுச்சித்திரத்தின் படப்பிடிப்பு நிற்பதும் நடப்பதுமாக ஓரிரு வருடங்கள் போக்குக் காட்டி பிறகு ஒரேயடியாக நின்று போனது. இப்போது அதனை மீண்டும் தூசு தட்டியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் போராட்ட அனல் அடிப்பதால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த வருடமே படத்தை வெளியிடவும் திட்டமாம்.
2012ல் பயங்கர சூறாவளி தமிழகத்தை தாக்கும் என ஜோசியன் சொன்னது சரிதான்.
No comments:
Post a Comment