அது என்னமோ தெரியவில்லை... எந்த நடிகையைக் கேட்டாலும் ஒரு படத்திலாவது விலை மாதுவா நடிக்கணும்னு ரொம்ப ஆசயாயிருக்கு என்பதை ஒரு ஸ்லோலன் மாதிரி தவறாமல் சொல்லிவிடுகிறார்கள்.
இந்த நடிகைகள் லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் ஸ்ரேயா. பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சூழலில், கடைத் திறப்பு, விளம்பரங்கள் என பிஸியாக இருக்கும் இவர், இப்போது ஆங்கிலப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
சமீபத்தில் சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், "நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு (அதான் ஏன்?!). எனக்கும் அப்படி நடிக்க ஆசை இருக்கிறது.
வேதம் படத்தில் அனுஷ்கா அந்த வேடத்தில் கலக்கியிருந்தார். என்னுடைய ஆசையும் நிறைவேறிவிட்டது. இப்போது வங்காள மொழி படமொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.
மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன. இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரைப் பார்த்தோடு சரி. சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து பேசுவது சகஜம். அதை சம்பந்தப்பட்ட நடிகைகள் விளம்பரமாக எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரவிதேஜா என்று எனனை விட வயதானவர்களுடன் ஜோடியாக நான் நடிக்கிறேன் என்கின்றனர். ஷம்மி கபூர், அமிதாப்பச்சன் காலத்தில் இருந்து இன்று வரை வயதான ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன்தான் ஜோடியாக நடிக்கின்றனர்.சினிமாவில் இதெல்லாம் சகஜம், தவறில்லை," என்றார்.
இந்த நடிகைகள் லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் ஸ்ரேயா. பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சூழலில், கடைத் திறப்பு, விளம்பரங்கள் என பிஸியாக இருக்கும் இவர், இப்போது ஆங்கிலப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
சமீபத்தில் சென்னை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், "நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு (அதான் ஏன்?!). எனக்கும் அப்படி நடிக்க ஆசை இருக்கிறது.
வேதம் படத்தில் அனுஷ்கா அந்த வேடத்தில் கலக்கியிருந்தார். என்னுடைய ஆசையும் நிறைவேறிவிட்டது. இப்போது வங்காள மொழி படமொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.
மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன. இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரைப் பார்த்தோடு சரி. சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து பேசுவது சகஜம். அதை சம்பந்தப்பட்ட நடிகைகள் விளம்பரமாக எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரவிதேஜா என்று எனனை விட வயதானவர்களுடன் ஜோடியாக நான் நடிக்கிறேன் என்கின்றனர். ஷம்மி கபூர், அமிதாப்பச்சன் காலத்தில் இருந்து இன்று வரை வயதான ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன்தான் ஜோடியாக நடிக்கின்றனர்.சினிமாவில் இதெல்லாம் சகஜம், தவறில்லை," என்றார்.
No comments:
Post a Comment