ஜெனீவா- ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் பெப்ரவரி 27ம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடர், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில், சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரின் முக்கிய சமர்களமாக இக்கூட்டத் தொடரினை கருகின்றோம்.
தமிழர்கள் மீதான போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை தொடர்பில் சிறிலங்கா அரசியல் தலைவர்கள் மீதும், சிறிலங்கா படையதிகாரிகள் மீதும் சுயாதீன சர்வதேச விசரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் நிலைப்பாடாக உள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வேச நாடுகளும், அனைத்துலக விசாரணையான்றின் அவசியத்தை தொடர்சியாக வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா மனித உரிமைச் சபையின் கடந்த கூட்டத் தொடரின் போது, தன் மீதான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள நியமித்துக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவினை சிறிலங்கா அரசு முன்னிறுத்தியிருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் தங்களது திருப்பதியின்மையை மேற்குலக நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் வெளிப்படுத்தி வருகின்றன. இதன் தொடர்சியாக தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரிலும் இதன் மீதான அழுத்தங்களில் அதிகரித்துக் கொள்ளும் என்ற நிலையில், இன நல்லிணக்கத்துக்கான அமைச்சகம் ஒன்றினை உருவாக்கி சர்வதேசத்தினை வழமைபோல் ஏமாற்றுகின்ற சிங்கள தேசம் உத்தி செய்திகளாக வெளிவருகின்றன.
சிங்கள தேசமானது, தாயக தமிழ் அரசியல் தலைவர்களுடான பேச்சுக்களை இழுத்தடித்தவாறு, இன நெருக்கடிக்கான பராளுமன்றக் குழுவொன்றினையும் உருவாக்கி, சர்வதேசத்தின் அழுத்தங்களை தணிக்கவும் முனைகின்றது.
மறுபுறம், மேற்குலகத்தின் இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக அரபுலக நாடுகளும் கைவிரித்து விடுமோ என்ற அச்ச நிலையில் சிங்களதேசமானது ஆபிரிக்க நாடுகளின் ஆதரவினைத் தேடுவதையும் காண்கின்றோம்.
இத்தகைய சூழலில் சிங்கள தேசத்துக்கு எதிரான தமிழர்களின் இராஜதந்திரப் போரில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்குரிய வாய்ப்பாக ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரினை பயன்படுத்துவோம்.
தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்குரிய மூலோபாயங்களை வகுத்து பல்வேறுபட்ட உயர்மட்டச் சந்திப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
புலம்பெயர் தேசங்களில் தமிழர் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் விடுதலைச் செயற்பாட்டு முயற்சிகளுக்கு நன்றியினையும் உறுதுணையினையும் வழங்குவதோடு ஓருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு அனைவரும் தயாராவோம்.
ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில், தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை முன்னிறுத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளோடு, பல உயர்மட்ட இராஜதந்திர பிரமுகர்களும் எங்களோடு பங்கெடுத்துக் கொள்ளவுள்ளனர். அத்தோடு தமிழர் அமைப்புக்களும் பிரதிநிதிகளும் பங்கெடுக்கின்றனர்.
ஐ.நாவுக்குள்ளே தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் வெளியே ஐ.நா முன்றிலில் ஒன்றுபட்ட மக்களின் எழுச்சியாக நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
லண்டனில் இருந்த ஜெனீவா நோக்கிய நீதிக்கும்- சமாதானத்துக்குமான நடைப்பயணமும் புதிய ஆண்டில் மக்கள் போராட்டத்தின் முதல்படியாக நீதிக்காய் ஒன்றுபடுவோம் எழுச்சி நிகழ்வில் வந்தடையவுள்ளது.
சர்வதேச விசாரணைக்கான ஆண்டாக 2012ஆண்டில் செற்படுவோம். மக்கள் போராட்டங்களை வலுப்படுத்வோம் எனும் உறுதியோடு ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவோம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் போர்குற்றம், மனித உரிமைகள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment