'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த பின், ஜெய்யுடன் காதல் என்று வெளியான தகவல்களால், இனி அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று அஞ்சலி சொல்லியிருந்தார். இதற்கிடையே, மீண்டும் அவர்கள் ஒரு தெலுங்குப் படத்தில் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்சலி கூறியதாவது:
இது உண்மை இல்லை. ஒரு விஷயத்தில் நான் தெளிவாக முடிவெடுத்து விட்ட பின், இதுபோன்ற தகவல்கள் வருவது வேதனையாக இருக்கிறது. காதலும், திருமணமும் என் தனிப்பட்ட விஷயம். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இதில் எது நடந்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்வேன்.
இது உண்மை இல்லை. ஒரு விஷயத்தில் நான் தெளிவாக முடிவெடுத்து விட்ட பின், இதுபோன்ற தகவல்கள் வருவது வேதனையாக இருக்கிறது. காதலும், திருமணமும் என் தனிப்பட்ட விஷயம். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இதில் எது நடந்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்வேன்.
No comments:
Post a Comment