ஹாங்காங்கில் நடந்த ரஜினி பட ஷூட்டிங்கில் தனது மகன் டைகருடன் பங்கேற்றார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். ரஜினி நடிக்கும் படம் 'கோச்சடையான். இதன் ஷூட்டிங் லண்டனிலும் பின்னர் கேரளாவிலும் நடந்தது. இதையடுத்து ஹாங்காங்கில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்க கடந்த வாரம் புறப்பட்டு சென்றார் ரஜினி. இப்படத்தில் மன்னர் வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். அவர் இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு தனது மகன் டைகரை அழைத்து சென்று, திரும்பியுள்ளார். இது பற்றி ஜாக்கி கூறும்போது, கடந்த வாரம் கோச்சடையான் படத்திற்காக ஹாங்காங் சென்றேன்.
உடன் என் மகன் டைகரையும் அழைத்து சென்றேன். புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகிறது. இது எனக்கு புது அனுபவம். என் மகனும் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார். நடிப்பு அனுபவத்தை நேரில் காண்பதற்காக ஹாங்காங் ஷூட்டிங்குக்கு அழைத்துச் சென்றேன். 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன். தமிழில் ஆரண்ய காண்டம்Õ படத்தில் நடித்தேன். இது இரண்டு தேசிய விருது வென்றது. அடுத்த படம் ரஜினியுடன் நடித்து வருகிறேன். 3வது படமும் பிரபல நடிகருடன் நடிப்பதாக இருக்கும் என்றார்.
உடன் என் மகன் டைகரையும் அழைத்து சென்றேன். புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகிறது. இது எனக்கு புது அனுபவம். என் மகனும் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார். நடிப்பு அனுபவத்தை நேரில் காண்பதற்காக ஹாங்காங் ஷூட்டிங்குக்கு அழைத்துச் சென்றேன். 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன். தமிழில் ஆரண்ய காண்டம்Õ படத்தில் நடித்தேன். இது இரண்டு தேசிய விருது வென்றது. அடுத்த படம் ரஜினியுடன் நடித்து வருகிறேன். 3வது படமும் பிரபல நடிகருடன் நடிப்பதாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment