'எல்லா தற்காப்பு கலைகளையும் கற்ற ஒரு ஆசான், தப்பித்து ஓடி வரும் ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். அதோடு அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுத்து உதவுகிறார். ஆனால் அந்தப் பெண் சமயம் பார்த்து அவரை தீர்த்துக் கட்டுகிறார். அது ஏன்?'
-இந்த கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'அருவிக்கரையோரம்.'
ஸ்ரீஹரி மூவிஸ் சார்பில் பி.பாரதிமோகன் தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. ஜோடியாக ஜூலு, சினி என இரண்டு புதிய நாயகிகள்.
வில்லனாக திரவியபாண்டியன் நடிக்க, நகைச்சுவை வேடத்தில் அல்வா வாசு, சுப்புராஜ் நடித்துள்ளனர். மேலும் அருண், சோனி, நித்யாமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லேனா மூவேந்தர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில நடித்துள்ளார்.
வீ.தஷி இசையமைக்க, ஆதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்கரை, திர்பரப்பு, வெள்ளி மலை, திருநயினார்குறிச்சி, ஆசியப் புகழ்தொட்டிப்பாலம் போன்ற இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
படம் குறித்து பாரதிமோகன் கூறுகையில், "காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை என எல்லாம் கலந்த ஜனரஞ்சகப் படமாக உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கலகலப்பான சுவராஸ்யமான படம். படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களும் சூப்பராக வந்திருக்கு.வசன காட்சிகள் முடிந்து படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளை சென்னை அருகே உள்ள கிராமங்களிலும், ஊட்டியிலும் படமாக்க இருக்கிறேன்..." என்றார்.
-இந்த கதைக் கருவை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் 'அருவிக்கரையோரம்.'
ஸ்ரீஹரி மூவிஸ் சார்பில் பி.பாரதிமோகன் தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. ஜோடியாக ஜூலு, சினி என இரண்டு புதிய நாயகிகள்.
வில்லனாக திரவியபாண்டியன் நடிக்க, நகைச்சுவை வேடத்தில் அல்வா வாசு, சுப்புராஜ் நடித்துள்ளனர். மேலும் அருண், சோனி, நித்யாமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் லேனா மூவேந்தர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில நடித்துள்ளார்.
வீ.தஷி இசையமைக்க, ஆதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்கரை, திர்பரப்பு, வெள்ளி மலை, திருநயினார்குறிச்சி, ஆசியப் புகழ்தொட்டிப்பாலம் போன்ற இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
படம் குறித்து பாரதிமோகன் கூறுகையில், "காதல், சென்டிமெண்ட், நகைச்சுவை என எல்லாம் கலந்த ஜனரஞ்சகப் படமாக உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கலகலப்பான சுவராஸ்யமான படம். படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களும் சூப்பராக வந்திருக்கு.வசன காட்சிகள் முடிந்து படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளை சென்னை அருகே உள்ள கிராமங்களிலும், ஊட்டியிலும் படமாக்க இருக்கிறேன்..." என்றார்.