எடியூரப்பா, அவரது மகன்கள், மகள் வீட்டில் நேற்று திடீர் ரெய்டு நடந்தது. அப்போது எடியூரப்பாவின் மகனுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி நடிகை ஹரிப்பிரியாவின் வீட்டிலும் ரெய்டு நடந்ததாக கன¢னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முரண், வல்லக்கோட்டை படங்களில் நடித்திருப்பவர் ஹரிப்பிரியா. இவர் இப்போது கன்னட படங்களில் நடிப்பதால், பெங்களூரில் வசிக்கிறார். கடந்த 3 வருடங்களாகவே இவருக்கும் கர்நாடக முன்னாள¢ முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் உலவுகிறது. சதாசிவநகர் பகுதியில் உள்ள ஹரிப்பிரியா வீடு மற்றும் அவரது கார் ஆகியவற்றுக்கு விஜயேந்திராதான் பைனான்ஸ் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் வீடுகளில் குவாரி முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. எடியூரப்பா மகனுடன் ஹரிப்பிரியா தொடர்பில் இருப்பதால் அவரையும் சிபிஐ கண்காணித்து வந்ததாகவும்,
அவரிடமும் விசாரணை மற்றும் வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் சான்டல்வுட்டில் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஹரிப்பிரியா கூறும்போது, Ô'என்னை யாரோ சிக்கலில் மாட்ட வைக்க முயல்கிறார்கள். எடியூரப்பா மகனை நான் எந்த நேரத்திலும் சந்தித்தது கிடையாது. அவருடைய பெயர்கூட எனக்கு தெரியாது. சினிமா மூலம் கிடைத்த எனது சொந்த பணத்தில்தான் வீடு, கார் வாங்கினேன். இதெல்லாம் இலவசமாக கிடைக்கிறது என்றால் நான் ஏன் நடிக்கப் போகிறேன். அதன் மூலம் எதற்கு வாழ்க்கையை நடத்தப்போகிறேன். இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் என் வீட்டை ரெய்டு செய்யப்போகிறார்கள்? தவறான தகவல் அடிப்படையில் ரெய்டு செய்ய முடிவு செய்தால் என் வீட்டில் உள்ள ஆவணங்களை அவர்கள் சோதித்து பார்க்கலாம். அப்போதுதாவது எனது உண்மை நிலை எல்லோருக்கும் புரியும் என்றார்.
அவரிடமும் விசாரணை மற்றும் வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் சான்டல்வுட்டில் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஹரிப்பிரியா கூறும்போது, Ô'என்னை யாரோ சிக்கலில் மாட்ட வைக்க முயல்கிறார்கள். எடியூரப்பா மகனை நான் எந்த நேரத்திலும் சந்தித்தது கிடையாது. அவருடைய பெயர்கூட எனக்கு தெரியாது. சினிமா மூலம் கிடைத்த எனது சொந்த பணத்தில்தான் வீடு, கார் வாங்கினேன். இதெல்லாம் இலவசமாக கிடைக்கிறது என்றால் நான் ஏன் நடிக்கப் போகிறேன். அதன் மூலம் எதற்கு வாழ்க்கையை நடத்தப்போகிறேன். இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் என் வீட்டை ரெய்டு செய்யப்போகிறார்கள்? தவறான தகவல் அடிப்படையில் ரெய்டு செய்ய முடிவு செய்தால் என் வீட்டில் உள்ள ஆவணங்களை அவர்கள் சோதித்து பார்க்கலாம். அப்போதுதாவது எனது உண்மை நிலை எல்லோருக்கும் புரியும் என்றார்.
No comments:
Post a Comment