கௌதம், விஜய் இணைவதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று டேக் ஆஃப் ஆகாது என்று ஒருசிலர் கூறி வந்த நிலையில், அப்படம் விரைவில் தொடங்கப்படும் என அவ்வப்போது தெரிவித்து வருகிறார் கௌதம். இது குறித்து விஜய் இதுவரை ஏதும் சொல்லவில்லை.
தாண்டவம் படத்தில் பிஸியாக இருக்கும் இயக்குனர் விஜய், நடிகர் விஜய்யை வைத்து தலைவன் படத்தை இயக்குகிறார். தாண்டவம் முடிந்ததும் தலைவன் என்கிறார் அவர். அப்படியானால் யோஹன்?
பதில் சொல்ல வேண்டிய நடிகர் விஜய் கமுக்காக இருப்பதால் இரு இயக்குனர்களும் அடுத்தது என் படம்தான் என சைலண்டாக அடித்துக் கொள்கிறார்கள். லேட்டஸ் செய்தி என்னவென்றால் துப்பாக்கி முடிந்ததும் விஜய்யை வைத்து யோஹனை இயக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார் கௌதம்.
விஜய் வழக்கம் போல கப்சிப்.
No comments:
Post a Comment