காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக 'கழுகு' பட டைரக்டர் மீது போலீசில் இளம்பெண் புகார் செய்தார். கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த படம் 'கழுகு'. சத்ய சிவா டைரக்ட் செய்தார். இவர் மீது இளம்பெண் சிவரஞ்சனி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். இதுபற்றி சிவரஞ்சனி கூறியதாவது: தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர் பட நிறுவனத்தின் நிர்வாக பணிகளை கவனித்து வந்தேன். கழுகு படத்தின் பணி தொடங்கியபோதுதான் இயக்குனர் சத்ய சிவாவை முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் என்னை காதலிப்பதாக கூறியதுடன் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். அதை ஏற்க மறுத்தேன். 'காதலிக்க சம்மதம் தெரிவிக்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டினார். தொடர்ந்து என்னிடம் அவர் அன்பாக பழகியதால் அவரின் காதல் உண்மையானது என்று நினைத்தேன். காதலை ஏற்றுக்கொண்டேன். பின்னர் பல இடங்களுக்கு ஜோடியாக சுற்றினோம். பிறகுதான் அவர் என்னை தவிர வேறு 2 பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி கேட்டபோது, 'இல்லை' என்று மறுத்ததுடன் எனது பெற்றோரை மார்ச் 18ம் தேதி சந்திக்க வருவதாகவும், அப்போது திருமணம் குறித்து பேசுவதாகவும் கூறினார். அதை நம்பினேன். ஆனால் சொன்னபடி வரவில்லை. இதையடுத்து நான் விஷம் குடித்துவிட்டேன். உடனடியாக என்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்றேன். அப்போது தினமும் என்னை சத்யசிவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 'தற்போது அடுத்த படத்துக்கான டிஸ்கஷனுக்கு வெளியூர் செல்கிறேன். திரும்பி வந்ததும் நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறேன்' என்று கூறினார். ஆனால் சொன்னபடி அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். சத்ய சிவா மீண்டும் திரும்பி வந்தாலும் அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இவ்வாறு சிவரஞ்சனி கூறினார்.
சங்கத்தில் தயாரிப்பாளர் புகார் 'பட்டியல்' சேகர் கூறியதாவது:
சிவரஞ்சனி எனது அலுவலகத்தில்தான் பணிபுரிந்தார். அவரும் சத்யசிவாவும் காதலிப்பது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே கண்டித்திருப்பேன். சத்யசிவா மீது சிவரஞ்சனி கமிஷனரிடம் புகார் கொடுத்ததுபற்றி சமீபத்தில்தான் தெரியும். தற்போது சிவரஞ்சனி எனது அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். இயக்குனர் சத்யசிவாவை பொறுத்தவரை என்னிடமும் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. எனது நிறுவனத்துக்கு 3 படங்கள் இயக்குவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை எனக்கு தெரியாமல் திருடி சென்று விட்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடர உள்ளேன். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் ஆகிய 3 சங்கங்களிலும் சத்யசிவா மீது புகார் கொடுத்திருக்கிறேன். என்னைபோல் மற்ற தயாரிப்பாளர்களும் அவரிடம் ஏமாந்து விடக் கூடாது.
இதுபற்றி கேட்டபோது, 'இல்லை' என்று மறுத்ததுடன் எனது பெற்றோரை மார்ச் 18ம் தேதி சந்திக்க வருவதாகவும், அப்போது திருமணம் குறித்து பேசுவதாகவும் கூறினார். அதை நம்பினேன். ஆனால் சொன்னபடி வரவில்லை. இதையடுத்து நான் விஷம் குடித்துவிட்டேன். உடனடியாக என்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்றேன். அப்போது தினமும் என்னை சத்யசிவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 'தற்போது அடுத்த படத்துக்கான டிஸ்கஷனுக்கு வெளியூர் செல்கிறேன். திரும்பி வந்ததும் நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறேன்' என்று கூறினார். ஆனால் சொன்னபடி அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். சத்ய சிவா மீண்டும் திரும்பி வந்தாலும் அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இவ்வாறு சிவரஞ்சனி கூறினார்.
சங்கத்தில் தயாரிப்பாளர் புகார் 'பட்டியல்' சேகர் கூறியதாவது:
சிவரஞ்சனி எனது அலுவலகத்தில்தான் பணிபுரிந்தார். அவரும் சத்யசிவாவும் காதலிப்பது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அப்போதே கண்டித்திருப்பேன். சத்யசிவா மீது சிவரஞ்சனி கமிஷனரிடம் புகார் கொடுத்ததுபற்றி சமீபத்தில்தான் தெரியும். தற்போது சிவரஞ்சனி எனது அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். இயக்குனர் சத்யசிவாவை பொறுத்தவரை என்னிடமும் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. எனது நிறுவனத்துக்கு 3 படங்கள் இயக்குவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை எனக்கு தெரியாமல் திருடி சென்று விட்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடர உள்ளேன். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் ஆகிய 3 சங்கங்களிலும் சத்யசிவா மீது புகார் கொடுத்திருக்கிறேன். என்னைபோல் மற்ற தயாரிப்பாளர்களும் அவரிடம் ஏமாந்து விடக் கூடாது.
No comments:
Post a Comment