தெற்கு சூடானில் மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்க நாடான சூடானில் இருந்து விடுதலை பெற்று கடந்த ஜுலை 9ம் திகதி தெற்கு சூடான் உதயமானது. அங்கு ஜாஸ்லே மாகாணத்தில் உள்ள பைபோர் பகுதியில் இரு பிரிவினருக்குமிடையே அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மோதல் ஏற்பட்டது. அது வன்முறையாக வெடித்து கலவரமாக மாறியது.
பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தில் இதுவரை 1000 பேர் உயிரிழந்தனர். எனவே. கலவரத்தை அடக்க அங்கு கூடுதலாக மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் பொலிஸாரும் குவிக்கப்பட் டுள்ளனர். இதற்கிடையே இரு பிரிவினரும் சமாதானத்துடன் அமைதி காக்கும்படி ஜனாதிபதி சால்வா கீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment