துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் என நல்ல படங்களைத் தந்தவர் இயக்குநர் எழில். சின்ன இடைவெளிக்குப் பிறகு அவர் தந்த படம் மனம் கொத்திப் பறவை. சிவகார்த்திகேயன்தான் இதில் ஹீரோ.
சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, நல்ல விளம்பரம். பாஸிடிவான செய்திகள் தொடர்ந்து வெளியானதால், ஓரளவு திருப்தியான ஓபனிங் கிடைத்தது.
முதல் வார வசூல் திருப்தியாக இருந்ததால், படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், எழிலுக்கு மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.
மனம் கொத்திப் பறவை மூலம் இயக்குநர் எழில் பணம் கொத்திப் பறவை ஆகிவிட்டாரேப்பா என நண்பர்கள் கமெண்ட் அடித்துக் கலாய்க்கும் அளவுக்கு எழில் பிஸியாகிவிட்டாராம்!
No comments:
Post a Comment