டூயட் மூவீஸ் சார்பில் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கும் படம், 'டோனி'. இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதன் முறையாக இளையராஜா படத்தின் பாடல்களை மேடையில் பாடினார். பின்னர் நிருபர்களிடம் இளையராஜா கூறும்போது, ''ஒரு படத்தின் இசையை உருவாக்குவது கதை களம்தான். 'டோனி' படம் நடுத்தர இந்திய குடிமகனின் வாழ்க்கை. இந்த நாட்டில் நாம் இப்போது கடைப்பிடித்து வரும் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கை முறை பற்றி நிறைய கேள்விகளை படம் எழுப்புகிறது. அந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை படம் ஏற்படுத்தும்'' என்றார்.
பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''இது கல்வி தொடர்பான படம். தேசம் முழுமைக்குமான படம். தந்தை மகன் உறவைச் சொல்லும் படம். பிரபல எழுத்தாளர் ஹயாஸ் மஞ்ரேக்கரின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதற்கான உரிமையை வாங்கி அதில் நான் சொல்ல வேண்டியதையும் சேர்த்து இதை இயக்கி உள்ளேன். இளையராஜா இதில் லைவ் மியூசிக் கொடுத்திருக்கிறார். என் பங்கு 20 சதவிகிதம்தான். அவரது பங்கு 80 சதவிகிதம். பிப்ரவரி 10ம் தேதி படம் வெளிவருகிறது'' என்றார்.
பிரகாஷ்ராஜ் கூறும்போது, ''இது கல்வி தொடர்பான படம். தேசம் முழுமைக்குமான படம். தந்தை மகன் உறவைச் சொல்லும் படம். பிரபல எழுத்தாளர் ஹயாஸ் மஞ்ரேக்கரின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதற்கான உரிமையை வாங்கி அதில் நான் சொல்ல வேண்டியதையும் சேர்த்து இதை இயக்கி உள்ளேன். இளையராஜா இதில் லைவ் மியூசிக் கொடுத்திருக்கிறார். என் பங்கு 20 சதவிகிதம்தான். அவரது பங்கு 80 சதவிகிதம். பிப்ரவரி 10ம் தேதி படம் வெளிவருகிறது'' என்றார்.
No comments:
Post a Comment