கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' முதல் 'வாரணம் ஆயிரம்' படம் வரை கௌதம்-ஹாரிஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்தது. இதனிடையே திடீரென இவர்கள் கூட்டணி பிரிந்தது. இனி கௌதம் மேனனுடன் இணையப் போவதில்லை என்று ஹாரிஸ் கூறியதாக தெரிகிறது. அதன் பின், இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானுடன் கூட்டணி வைத்தார் கௌதம் மேனன். இந்த கூட்டணியும் வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதனையடுத்து, தான் இயக்கும் அடுத்து படமான 'நீ தானே என் பொன்வசந்தம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார் கௌதம். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம்.
வேறு வழியில்லாமல் தனது முன்னாள் சகா ஹாரிஸையே கௌதம் நாடியதாக தெரிகிறது. இதனிடையே இசைஞானி இளையராஜா, படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனன் இளையராஜாவை சந்தித்து பேசியதாகவும், அவரும் இசையமைக்க ஒப்புக்கொண்டார் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த புது கூட்டணி மட்டும் அமைந்து விட்டால், ரசிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் காத்திருக்கிறது. ரொம்ப நாட்கள் கழித்து இசைஞானி இளையராஜா ஒரு முழு காதல் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, காதல் படத்துக்கு இசைஞானியின் இசை சொல்லவா வேண்டும்... நிச்சயம் மிகப்பெரிய ஹிட் தான்...
வேறு வழியில்லாமல் தனது முன்னாள் சகா ஹாரிஸையே கௌதம் நாடியதாக தெரிகிறது. இதனிடையே இசைஞானி இளையராஜா, படத்திற்கு இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் மேனன் இளையராஜாவை சந்தித்து பேசியதாகவும், அவரும் இசையமைக்க ஒப்புக்கொண்டார் எனவும் கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த புது கூட்டணி மட்டும் அமைந்து விட்டால், ரசிகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் காத்திருக்கிறது. ரொம்ப நாட்கள் கழித்து இசைஞானி இளையராஜா ஒரு முழு காதல் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, காதல் படத்துக்கு இசைஞானியின் இசை சொல்லவா வேண்டும்... நிச்சயம் மிகப்பெரிய ஹிட் தான்...
No comments:
Post a Comment