சுற்றுலா படத்தின் பப்ளிசிட்டிக்காக எங்களைப் பலியாக்கிவிட்டனர் அதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் என சின்னத்திரை நடிகர் பிரஜின் - சான்ட்ரா ஜோடி குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை குன்னூரில் படப்பிடிப்பிலிருந்தபோது பிரஜினும் சான்ட்ராவும் மாயமாகிவிட்டதாக குற்றம்சாட்டினர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும்.
ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் வேறு சில உண்மைகள் தெரிய வந்தன.
இதுகுறித்து பிரஜின் - சான்ட்ராவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் கூறுகையில், "இருபத்து மூன்று நாட்கள் தேதி கொடுத்து நடித்தோம். இன்னும் இருபத்தைந்து நாட்கள் எங்களுடைய வேலை பாக்கி இருந்தது. நாங்கள் தொடர்ந்து இருந்து நடித்துவிட்டுப் போகிறோம் என்று இயக்குனரிடம் சொன்னோம். அவர்களோ வேறு காட்சிகளை நாங்கள் சூட் பண்ண வேண்டியிருக்கு. உங்கள் வேலை முடிந்தது. அடுத்த செட்யூலில் உங்கள் தேதி தேவைப்படும். தற்போது நீங்கள் போகலாம் என டிக்கெட் எடுத்து தந்தவர்களே அவர்கள்தான்.
வீடு வந்து சேர்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி. நாங்கள் படப்பிடிப்பில் காணாமல் போய்விட்டோமென.. அப்படி பாதியில் ஓடி வரவேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. நடிக்க போனவர்கள் முழுமையாக நடிக்காமல் ஏன் வரவேண்டும்? நானும் என் மனைவியும் எப்படியாவது நடித்து ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்றுதான் போராடி நடித்து வருகிறோம்.
இயக்குனர்தான் இப்படி எங்கள் பெயரைக் கெடுத்து செய்தி கொடுத்திருக்கிறார். நீங்கள் நன்றாக விசாரித்துப் பாருங்கள் எங்களைப் பற்றி எந்த சங்கத்திலும் அவர்கள் கம்ப்ளைன்ட் கொடுக்கவே இல்லை. பத்திரிகைகளில் மட்டும் எல்லா சங்கத்திலும் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக செய்தி வருகிறது. பப்ளிசிட்டிக்காக எங்களை பலிகடாவாக்கிவிட்டார் இயக்குனர். பப்ளிசிட்டிக்காக எங்கள் வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?
அப்படி நாங்கள் தவறு செய்திருந்தால் சங்கங்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். நடிக்காமல் கூட இருந்துவிட்டுப்போகிறோம். அப்படியில்லாவிட்டால் அவர்கள் பத்திரிகையை கூப்பிட்டு உண்மையை சொல்லவேண்டும் அதன்பிறகுதான் மேற்கொண்டு இந்த படத்தில் நடிக்க இருக்கிறோம்," என்றனர்.
பாவம் வளர்ற பிள்ளைகளை ஏம்பா வம்புல மாட்டிவிடுறீங்க?
கடந்த சனிக்கிழமை குன்னூரில் படப்பிடிப்பிலிருந்தபோது பிரஜினும் சான்ட்ராவும் மாயமாகிவிட்டதாக குற்றம்சாட்டினர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும்.
ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் வேறு சில உண்மைகள் தெரிய வந்தன.
இதுகுறித்து பிரஜின் - சான்ட்ராவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் கூறுகையில், "இருபத்து மூன்று நாட்கள் தேதி கொடுத்து நடித்தோம். இன்னும் இருபத்தைந்து நாட்கள் எங்களுடைய வேலை பாக்கி இருந்தது. நாங்கள் தொடர்ந்து இருந்து நடித்துவிட்டுப் போகிறோம் என்று இயக்குனரிடம் சொன்னோம். அவர்களோ வேறு காட்சிகளை நாங்கள் சூட் பண்ண வேண்டியிருக்கு. உங்கள் வேலை முடிந்தது. அடுத்த செட்யூலில் உங்கள் தேதி தேவைப்படும். தற்போது நீங்கள் போகலாம் என டிக்கெட் எடுத்து தந்தவர்களே அவர்கள்தான்.
வீடு வந்து சேர்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி. நாங்கள் படப்பிடிப்பில் காணாமல் போய்விட்டோமென.. அப்படி பாதியில் ஓடி வரவேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. நடிக்க போனவர்கள் முழுமையாக நடிக்காமல் ஏன் வரவேண்டும்? நானும் என் மனைவியும் எப்படியாவது நடித்து ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்றுதான் போராடி நடித்து வருகிறோம்.
இயக்குனர்தான் இப்படி எங்கள் பெயரைக் கெடுத்து செய்தி கொடுத்திருக்கிறார். நீங்கள் நன்றாக விசாரித்துப் பாருங்கள் எங்களைப் பற்றி எந்த சங்கத்திலும் அவர்கள் கம்ப்ளைன்ட் கொடுக்கவே இல்லை. பத்திரிகைகளில் மட்டும் எல்லா சங்கத்திலும் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக செய்தி வருகிறது. பப்ளிசிட்டிக்காக எங்களை பலிகடாவாக்கிவிட்டார் இயக்குனர். பப்ளிசிட்டிக்காக எங்கள் வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?
அப்படி நாங்கள் தவறு செய்திருந்தால் சங்கங்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். நடிக்காமல் கூட இருந்துவிட்டுப்போகிறோம். அப்படியில்லாவிட்டால் அவர்கள் பத்திரிகையை கூப்பிட்டு உண்மையை சொல்லவேண்டும் அதன்பிறகுதான் மேற்கொண்டு இந்த படத்தில் நடிக்க இருக்கிறோம்," என்றனர்.
பாவம் வளர்ற பிள்ளைகளை ஏம்பா வம்புல மாட்டிவிடுறீங்க?
No comments:
Post a Comment