கேரள இசையமைப்பாளர் ஜான்சன் நூற்றுக்கணக்கான மலையாள சினிமா பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். 2 முறை தேசிய விருதுகளை பெற்ற இவர் கேரள மாநில அரசின் விருதை 5 முறை பெற்று உள்ளார்.
சென்னையில் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
இசையமைப்பாளர் ஜான்சன் மறைவுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.
சக இசையமைப்பாளர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான திருச்சூரில் இன்று நடக்கிறது.
No comments:
Post a Comment