தெலுங்கில் முன்னிணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். அவ்வப்போது தமிழிலும் வந்து தலையைக் காட்டிவிட்டு போவார். இருப்பினும் அவருக்கு பாலிவுட் மீது தான் கண்கள். அவர் ஏக்கத்தை தீர்ககும் வகையில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் சேர்ந்து சிங்கம் படத்தில் நடித்தார்.
அந்த படத்தில் அவர் வரும் பல காட்சிகளை அவர் அறியாமலேயே நீக்கிவிட்டார்களாம். இதனால் தன் உழைப்பெல்லாம் வீனாகிவிட்டது என்று காஜல் ஒரே புலம்பலாம்.
அப்பாடா பாலிவுட்டில் அறிமுகமாகியாச்சு இனி நிறைய வாய்ப்புகள் வரும் என்று அம்மணி பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லை. பாலிவுட்டை நம்பி டோலிவுட்டில் வந்த பல வாய்ப்புகளை தட்டிக்கழித்துள்ளார். அதை நினைத்து தற்போது வருந்துகிறாராம்.
அடடா பாலிவுட்டில் கூப்பிடுவார்கள் என்று நினைத்து நல்ல நல்ல வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிட்டேனே என்று புலம்புகிறாராம்.
சரி விடுங்க இனியாவது சூதானமாக இருந்துக்கோங்க…!
No comments:
Post a Comment