இந்தியாவானது தனது அயல் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராக பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் இராஜ தந்திரியான வில்லியம் எச். அவேறி தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளதாக பெர்ஸ்ட் போஸ்ட் .கொம் இணையத் தளத்தில் உத்தாரா சௌத்ரி எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அணுவாயுத பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெரிக்காவுடனான அதன் உறவில் விரிசல் ஏற்பட்டு 1990 களில் சென்னையில் அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் இராஜ தந்திரியான வில்லியம் எச் அவேறி (ஙிடிடூடூடிச்ட் ஏ அதிஞுணூதூ) போன்ற மிகக் குறைவானவர்களே அமெரிக்க இந்திய உறவுகள் தொர்பாக நன்கறிந்து வைத்துள்ளனர்.
சீனாவின் கெட்ட கனவு, அமெரிக்காவின் கனவு: அடுத்த பூகோள வல்லரசாக இந்தியா (இடடிணச்’ண் Nடிஞ்டtட்ச்ணூஞு, அட்ஞுணூடிஞிச்’ண் ஈணூஞுச்ட் : ஐணஞீடிச் ச்ண் tடஞு Nஞுதுt எடூணிஞஞுடூ கணிதீஞுணூ) என தலையிடப்பட்ட அவேரியால் எழுதப்பட்ட புதிய நூலில் உலகின் மிகப் பெரிய மற்றும் செல்வந்த நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் தொடர்புகள் தொடர்பாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலில் சீனாவிற்கு எதிரான கருத்துக்களையும் அவேரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாகிஸ்தான், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளுடன் அந்த பிராந்தியத்தில் சீனா இவ்வாறு தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தக்க பதிலை இந்தியா வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அயல் நாடுகளுடன் சீனாவானது தனது தலையீடுகளை அதிகரித்து வருவதுடன் சிலநேரங்களில் அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றது.
தென் கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பில் (அண்ண்ணிஞிடிச்tடிணிண ணிஞூ குணிதtடஞுச்ண்t அண்டிச்ண Nச்tடிணிணண் – அகுஉஅN ) உறுப்பினராக உள்ள இந்திய மற்றும் பெரும்பாலான நாடுகள் சீனாவுடனான பிராந்திய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவானது தனது அயல் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்தவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும் என அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தற்போது சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்த செல்வாக்குத் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும். இது குறுகிய காலத்தில் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா தலையீடற்று இருப்பதைத் தடுப்பதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பனிப் போர்க் காலத்தில் சோ வியத் யூனியனால் பின்லாந்து அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தை அவேறி எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள தென்னாசியாவின் வர்த்தக நடவடிக்கைகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க சிறிலங்காவின் மந்தகரமான மீன்பிடிப்பிரதேசமாக இருந்த அம்பாந்தோட்டையில் வெற்றிகரமான புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக சீனா எவ்வாறு மில்லியன் கணக்கான நிதியை முதலீடு செய்துள்ளது என்பதை அவேறி தனது நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த விடயமான இப்பிராந்தியத்தை மீள மாற்றியுள்ளதுடன் அயல் நாடுகளுடனான தனது உறவை மீளவும் இந்தியா சிந்திப்பதற்கான நிலைப்பாட்டை கொடுத்துள்ளது.
சீன நாடு தற்போது பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் துறைமுக வசதிகளை அபிவிருத்தி செய்துவருகின் றது. அத்துடன் நேபாளத்தில் தொடர்ந்து பாதைகளை அமைப்பதற்கான திட்டத்தையும் சீனா கொண்டுள்ளது.
அவேறி போன்ற ஆய்வாளர்களின் வாதத்தின் படி இவ்வாறான சீனத் திட்டங்கள் இந்தியாவுக்கு சினத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய "முத்துமாலை' என்ற மூலோபாயம் ஊடாக சீனாவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவது தொடர்பாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1991ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கேற்ப அதன் பூகோள அரசியல் செல்வாக்கானது பொருத்தமான வளர்ச்சியை எட்டவில்லை என அவேறி கவலை தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் முன்னைய புஷ் நிர்வாகம் போன்று தற்போதைய ஒபாமா நிர்வாகமும் இந்தியாவுடன் நீண்ட கால மூலோபாயத்தை கூட்டு நடவடிக்கைக்கான முதலீட்டை மேற்கொண்டுள்ளதா என்பது தொடர்பாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதற்கு அப்பால் அமெரிக்காவானது ஆசியாவை முன்னுரிமைப் படுத்துகின்றது எனப் பிரகடனப்படுத்தும் அதேவேளையில் சீனாவானது பெரும் அச்சுறுத்தாலாக இருப்பதையும் அது அடையாளங் கண்டுள்ளது.
இந்தியாவானது ஐக்கிய இராச்சியம் போன்று வளரவில்லை . அமெரிக்க நலன்களுக்காக இந்தியா ஒரு லெப்ரினட் போல பணியாற்றும் என நம்பும் எந்தவொரு அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களும் மூலிகையைப் புகை பிடிப்பவர் என்றே கருத வேண்டும்.
ஆனால் இந்தியாவானது தனது அண்மைய பொருளாதார வெற்றிகளை உண்மையான பூகோள வல்லரசாக மாறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என அவேறி கருதுகின்றார். அமெரிக்காவுடன் இந்தியாவானது பொதுவான நலன்களை அதாவது விரிவான முன்னேற்றமடைந்த துறை சார் நலன்களைத் தேடிக் கொள்வதாகவும் இதை விட ஒத்துழைப்பு வழங்குவதற்கான விருப்பத்தையும் இந்தியா வழங்க வேண்டும் எனவும் அவேறி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவானது ஆங்கிலோ அமெரிக்க உறவில் அணஞ்டூணி – அட்ஞுணூடிஞிச்ண ணூஞுடூச்tடிணிணண்டடிணீ கைக்கொள்ளப்பட்ட ஜனநாயகம், மனித உரிமைகள் சட்ட ஆளுமை, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற அதே விழுமியங்களையே கொண்டுள்ளது என அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வலுவான இந்திய அமெரிக்க கூட்டானது வேரூன்றக் கூடிய நிலையில் உள்ள போதிலும் தகவற் தொழில் நுட்பம் மீதான இந்தியாவின் நம்பிக்கை தொடர்பாக அல்லது "கொலனித்துவ அடிமைத்தனம்' போன்று இணையத் தளங்கள் ஊடாக அமெரிக்க நிறுவனங்களிற்கு அடிமட்ட விலையில் இந்தியாவானது அறிவுத் திறனை விற்பது தொடர்பாகவும் அவேறி தனது நூலில் ஒப்பிட்டுள்ளார்.
வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுடன் கூடிய அமெரிக்க நிறுவனங்களிற்கான செயற்திறனை இந்திய நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும் அவேறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா தனது பாதுகாப்பு விடயங்களில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவேறி மீள வலியுறுத்தியுள்ளார்
புதினப்பலகை இணையத் தளத்திலிருந்து
இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் இராஜ தந்திரியான வில்லியம் எச். அவேறி தனது புதிய நூலில் குறிப்பிட்டுள்ளதாக பெர்ஸ்ட் போஸ்ட் .கொம் இணையத் தளத்தில் உத்தாரா சௌத்ரி எழுதியுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அணுவாயுத பரிசோதனையை புதுடில்லி மேற்கொண்டதனால் அமெரிக்காவுடனான அதன் உறவில் விரிசல் ஏற்பட்டு 1990 களில் சென்னையில் அமெரிக்கத் தூதராகக் கடமையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் இராஜ தந்திரியான வில்லியம் எச் அவேறி (ஙிடிடூடூடிச்ட் ஏ அதிஞுணூதூ) போன்ற மிகக் குறைவானவர்களே அமெரிக்க இந்திய உறவுகள் தொர்பாக நன்கறிந்து வைத்துள்ளனர்.
சீனாவின் கெட்ட கனவு, அமெரிக்காவின் கனவு: அடுத்த பூகோள வல்லரசாக இந்தியா (இடடிணச்’ண் Nடிஞ்டtட்ச்ணூஞு, அட்ஞுணூடிஞிச்’ண் ஈணூஞுச்ட் : ஐணஞீடிச் ச்ண் tடஞு Nஞுதுt எடூணிஞஞுடூ கணிதீஞுணூ) என தலையிடப்பட்ட அவேரியால் எழுதப்பட்ட புதிய நூலில் உலகின் மிகப் பெரிய மற்றும் செல்வந்த நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் தொடர்புகள் தொடர்பாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலில் சீனாவிற்கு எதிரான கருத்துக்களையும் அவேரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாகிஸ்தான், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளுடன் அந்த பிராந்தியத்தில் சீனா இவ்வாறு தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தக்க பதிலை இந்தியா வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அயல் நாடுகளுடன் சீனாவானது தனது தலையீடுகளை அதிகரித்து வருவதுடன் சிலநேரங்களில் அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றது.
தென் கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பில் (அண்ண்ணிஞிடிச்tடிணிண ணிஞூ குணிதtடஞுச்ண்t அண்டிச்ண Nச்tடிணிணண் – அகுஉஅN ) உறுப்பினராக உள்ள இந்திய மற்றும் பெரும்பாலான நாடுகள் சீனாவுடனான பிராந்திய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவானது தனது அயல் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் செல்வாக்குச் செலுத்தவதன் மூலம் சீனாவின் பிராந்திய வளர்ச்சிப் போக்கிற்கு எதிராகப் பதிலளிக்க வேண்டும் என அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தற்போது சிறிலங்கா மீதான சீனாவின் அதிகரித்த செல்வாக்குத் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும். இது குறுகிய காலத்தில் சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா தலையீடற்று இருப்பதைத் தடுப்பதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பனிப் போர்க் காலத்தில் சோ வியத் யூனியனால் பின்லாந்து அடிமைப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தை அவேறி எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள தென்னாசியாவின் வர்த்தக நடவடிக்கைகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க சிறிலங்காவின் மந்தகரமான மீன்பிடிப்பிரதேசமாக இருந்த அம்பாந்தோட்டையில் வெற்றிகரமான புதிய துறைமுகம் ஒன்றை அமைப்பதற்காக சீனா எவ்வாறு மில்லியன் கணக்கான நிதியை முதலீடு செய்துள்ளது என்பதை அவேறி தனது நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த விடயமான இப்பிராந்தியத்தை மீள மாற்றியுள்ளதுடன் அயல் நாடுகளுடனான தனது உறவை மீளவும் இந்தியா சிந்திப்பதற்கான நிலைப்பாட்டை கொடுத்துள்ளது.
சீன நாடு தற்போது பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் துறைமுக வசதிகளை அபிவிருத்தி செய்துவருகின் றது. அத்துடன் நேபாளத்தில் தொடர்ந்து பாதைகளை அமைப்பதற்கான திட்டத்தையும் சீனா கொண்டுள்ளது.
அவேறி போன்ற ஆய்வாளர்களின் வாதத்தின் படி இவ்வாறான சீனத் திட்டங்கள் இந்தியாவுக்கு சினத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய "முத்துமாலை' என்ற மூலோபாயம் ஊடாக சீனாவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவது தொடர்பாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1991ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக் கேற்ப அதன் பூகோள அரசியல் செல்வாக்கானது பொருத்தமான வளர்ச்சியை எட்டவில்லை என அவேறி கவலை தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் முன்னைய புஷ் நிர்வாகம் போன்று தற்போதைய ஒபாமா நிர்வாகமும் இந்தியாவுடன் நீண்ட கால மூலோபாயத்தை கூட்டு நடவடிக்கைக்கான முதலீட்டை மேற்கொண்டுள்ளதா என்பது தொடர்பாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதற்கு அப்பால் அமெரிக்காவானது ஆசியாவை முன்னுரிமைப் படுத்துகின்றது எனப் பிரகடனப்படுத்தும் அதேவேளையில் சீனாவானது பெரும் அச்சுறுத்தாலாக இருப்பதையும் அது அடையாளங் கண்டுள்ளது.
இந்தியாவானது ஐக்கிய இராச்சியம் போன்று வளரவில்லை . அமெரிக்க நலன்களுக்காக இந்தியா ஒரு லெப்ரினட் போல பணியாற்றும் என நம்பும் எந்தவொரு அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களும் மூலிகையைப் புகை பிடிப்பவர் என்றே கருத வேண்டும்.
ஆனால் இந்தியாவானது தனது அண்மைய பொருளாதார வெற்றிகளை உண்மையான பூகோள வல்லரசாக மாறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும் என அவேறி கருதுகின்றார். அமெரிக்காவுடன் இந்தியாவானது பொதுவான நலன்களை அதாவது விரிவான முன்னேற்றமடைந்த துறை சார் நலன்களைத் தேடிக் கொள்வதாகவும் இதை விட ஒத்துழைப்பு வழங்குவதற்கான விருப்பத்தையும் இந்தியா வழங்க வேண்டும் எனவும் அவேறி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவானது ஆங்கிலோ அமெரிக்க உறவில் அணஞ்டூணி – அட்ஞுணூடிஞிச்ண ணூஞுடூச்tடிணிணண்டடிணீ கைக்கொள்ளப்பட்ட ஜனநாயகம், மனித உரிமைகள் சட்ட ஆளுமை, திறந்த சந்தைப் பொருளாதாரம் போன்ற அதே விழுமியங்களையே கொண்டுள்ளது என அவேறி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வலுவான இந்திய அமெரிக்க கூட்டானது வேரூன்றக் கூடிய நிலையில் உள்ள போதிலும் தகவற் தொழில் நுட்பம் மீதான இந்தியாவின் நம்பிக்கை தொடர்பாக அல்லது "கொலனித்துவ அடிமைத்தனம்' போன்று இணையத் தளங்கள் ஊடாக அமெரிக்க நிறுவனங்களிற்கு அடிமட்ட விலையில் இந்தியாவானது அறிவுத் திறனை விற்பது தொடர்பாகவும் அவேறி தனது நூலில் ஒப்பிட்டுள்ளார்.
வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகளுடன் கூடிய அமெரிக்க நிறுவனங்களிற்கான செயற்திறனை இந்திய நிறுவனங்கள் அதிகரித்து வருவதாகவும் அவேறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா தனது பாதுகாப்பு விடயங்களில் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவேறி மீள வலியுறுத்தியுள்ளார்
புதினப்பலகை இணையத் தளத்திலிருந்து
No comments:
Post a Comment