வெளியாட்களை வைத்து தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தினால் படப்பிடிப்புகள் முடங்கும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) எச்சரித்துள்ளது. தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே புதிய சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. 3 ஆண்டுக்கு ஒருமுறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம். இம்முறை அதுபற்றி முடிவு செய்யவில்லை. இதையடுத்து பெப்சி தாங்களாகவே புதிய சம்பளம் நிர்ணயித்து அதன்படி வேலை செய்ய முடிவெடுத்தது. அதை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. இதுபற்றி ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், 'பெப்சி தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. வழக்கமாக இரு சங்கமும் பேசி உடன்பாட்டு செய்த பிறகுதான் அது அமலுக்கு வரும். தன்னிச்சையாக நடந்துகொண்டது ஒப்பந்தம் மீறிய செயல். இனி எங்கள் சங்கத்துக்கும், பெப்சிக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எங்கள் சங்க தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம். இதற்கு உடன்பட்டு வருபவர்களுக்கு எங்கள் குழு நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படும். இதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் ஒத்துழைப்பு தராதுÕ என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து பெப்சி அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனி நூறு அடி சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் எம்.ஏ.ராமதுரை தலைமை தாங்கினார். செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியது: புதிய சம்பள ஒப்பந்தத்தை நிர்ணயிக்காமல் தயாரிப்பாளர் சங்கம் காலதாமதம் செய்ததால் பெப்சியே புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்தது. அதை ஏற்று பல தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள். நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வேலை செய்கிறோம். இந்நிலையில் வெளியாட்களை வைத்து வேலை செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. வெளியாட்கள் வேலை செய்ய வந்தால் எங்கள் சங்கத்தை சேர்ந்த யாரும் வேலை செய்ய மாட்டார்கள். இதுதவிர பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களில் ஒரு சங்கத்தை ஒதுக்கினால் கூட படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். ஆந்திரா, கர்நாடகா உள்பட எல்லா மாநிலங்களிலும் உள்ள பெப்சி அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், தமிழ் பட ஷூட்டிங்கிற்கு பணியாற்ற அழைத்தால் வேலை செய்யக்கூடாது என்று கூறியுள்ளோம். இந்த நிலை நீடித்தால் படப்பிடிப்புகள் முடங்கும். இவ¢வாறு அவர்கள் கூறினர். திரைப்பட்ட தொழிலாளர்கள்-தயாரிப்பாளர்கள் மோதலால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெப்சி அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனி நூறு அடி சாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் எம்.ஏ.ராமதுரை தலைமை தாங்கினார். செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியது: புதிய சம்பள ஒப்பந்தத்தை நிர்ணயிக்காமல் தயாரிப்பாளர் சங்கம் காலதாமதம் செய்ததால் பெப்சியே புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்தது. அதை ஏற்று பல தயாரிப்பாளர்கள் ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள். நாங்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வேலை செய்கிறோம். இந்நிலையில் வெளியாட்களை வைத்து வேலை செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. வெளியாட்கள் வேலை செய்ய வந்தால் எங்கள் சங்கத்தை சேர்ந்த யாரும் வேலை செய்ய மாட்டார்கள். இதுதவிர பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களில் ஒரு சங்கத்தை ஒதுக்கினால் கூட படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். ஆந்திரா, கர்நாடகா உள்பட எல்லா மாநிலங்களிலும் உள்ள பெப்சி அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், தமிழ் பட ஷூட்டிங்கிற்கு பணியாற்ற அழைத்தால் வேலை செய்யக்கூடாது என்று கூறியுள்ளோம். இந்த நிலை நீடித்தால் படப்பிடிப்புகள் முடங்கும். இவ¢வாறு அவர்கள் கூறினர். திரைப்பட்ட தொழிலாளர்கள்-தயாரிப்பாளர்கள் மோதலால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment