மேற்படி விழாவில் கலந்து கொண்ட கண்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாகவும் இச் செய்தி நேரடியாகவே கனடியத் தமிழ்க் காங்கிரஸால் தெரிவிக்கப்பட்டதோடு இவ் உறவைப் பலப்படுத்துமுகமான அமைச்சரவை சகாக்களுடனான சந்திப்புக்கான அழைப்பை தமிழ்க்காங்கிரஸ் கடித மூலம் விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
கனடியப் பிரதமரின் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்திய சிறீலங்கா மீதான கண்டன நடவடிக்கையைச் சுட்டிக் காட்டியே கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் இந்த நன்றியறிதலைத் தெரிவித்திருந்ததோடு தாங்கள் கனடியர்கள், தமிழர்கள் சம்பந்தமான விவகாரங்களில் தொடர்ந்தும் அரசியற் கட்சிகளுடனும் தலைவர்களுடன் சேர்ந்து இயங்கும் என்றும் தெரிவித்தார்.
அத்தோடு கனடியத் தமிழர்களிற்குத் தேவையான கலாச்சார – சமூக மண்டபமொன்றை அமைப்பதையே 2012ம் ஆண்டிற்கான திட்டமாக எடுத்துள்ளதாகவும், ஈழத் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நியாயங் கிடைப்பதற்கு தொடர்ந்தும் பாடுபடும் என்றும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment