சனல்- 4 ஊடகம் அடிப்படையற்ற வகையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி மற்றுமொரு கணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பான செய்தி அறிக்கையிடலின் போது, சனல்- 4 ஊடகம் ஒரு பக்கச்சார்பான கொள்கைகளை பின்பற்றி வருகின்றது.
மேலும், இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை நெருக்கடியில் ஆழ்த்தும் நோக்கில் சனல்- 4 ஊடகம் காணொளிகளை வெளியிட்டு வருகின்றது.
இதே வேளை, போரின் பின்னர் நாட்டில் பல சாதகமான நிலைமைகளை சனல்- 4 ஊடகம் கண்டுகொள்ளத் தவறியுள்ளதாகவும் பிரிட்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழு அளவிலான நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் எனவும் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.


No comments:
Post a Comment