காணமல் போன மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 8ம் திகதி மலேசியாவிலிருந்து 239 பயணிகளுடன் சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது. இந்த விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்த நிலையில், விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதை அடுத்து தெற்கு இந்தியப் பெருங்கடலில் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில் பேட்டரி மூலம் இயங்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டி வெறும் 30 நாட்கள் மட்டுமே பேட்டரியில் இயங்கும் தன்மையுடையது என்பதால், கறுப்புப் பெட்டியை விரைவில் மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கறுப்புப் பெட்டியை தேடுவதற்கு என்று சென்சார் தொழில் நுட்ப கப்பல்கள் இரண்டு இந்தியப் பெருங்கடல் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், சிறப்பு விமானங்கள் என்று விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணியிலிருக்க, இப்போது விஷேசமான சென்சார் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கப்பல் தொழில்நுட்ப உதவியால் நீரில் மூழ்கியிருக்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஒளி அலை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 8ம் திகதி மலேசியாவிலிருந்து 239 பயணிகளுடன் சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது. இந்த விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்த நிலையில், விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதை அடுத்து தெற்கு இந்தியப் பெருங்கடலில் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில் பேட்டரி மூலம் இயங்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டி வெறும் 30 நாட்கள் மட்டுமே பேட்டரியில் இயங்கும் தன்மையுடையது என்பதால், கறுப்புப் பெட்டியை விரைவில் மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கறுப்புப் பெட்டியை தேடுவதற்கு என்று சென்சார் தொழில் நுட்ப கப்பல்கள் இரண்டு இந்தியப் பெருங்கடல் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், சிறப்பு விமானங்கள் என்று விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணியிலிருக்க, இப்போது விஷேசமான சென்சார் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கப்பல் தொழில்நுட்ப உதவியால் நீரில் மூழ்கியிருக்கும் விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஒளி அலை மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment