திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் உதயகுமாரை ஆதரித்து சின்னாளப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் அதிமுகவுக்கு ஆதரவாக மக்களிடம் பேசினார்.
இதன் போது, ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரஆல் இந்தியா வல்லரசாகும். 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே வேட்பாளர் என்ற எண்ணத்தில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் பேசினார்.
ஆன்மிக பணி செய்ய வேண்டிய மதுரை குருமகா சன்னிதானம் இன்றைக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டி ஓட்டு கேட்கிறது என்றால், அதற்கு காரணம் உள்ளது. இந்த நாட்டின் குடிமகன், ஒரு வாக்காளன் என்ற முறையில் எங்களுக்கும் சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ளது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் நன்றாக இருக்கும். சமூகத்தில் வாழும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ முடியும். ஆனால் இன்றைக்கு சமூகம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது.
நாட்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கை, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்திய நாட்டை வெளிநாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்தும், சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்ற கூடிய திறனும், ஆளுமையும் உள்ள ஒரே தலைவி ஜெயலலிதா தான், ஜெயலலிதா பிரதமர் ஆனால் தான் இந்த நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும், வல்லரசாக ஆக்க முடியும் என்பதை உணர்ந்து தான் எங்களது சன்னிதானம் அ.தி.மு.க.வை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.
தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவை மீட்டெடுப்பார், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றுவார். தமிழ் மொழி உயர்ந்த மொழி என்பதையும் நிலைநாட்டுவார். தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பார்,. நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும், நதிகளை தேசியமயமாக்குவார். விலைவாசியை கட்டுப்படுத்த கூடிய திறனும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கூடிய தெம்பும் அவருக்கு தான் உண்டு.
இந்திய நாடு வளம் பெற, வளர்ச்சி பெற, அமைதி நிலவ ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும், நாட்டை பாதுகாக்க, பொருளாதார சீர்குலைவை தடுக்க பயங்கர வாதம் ஒடுக்கப்பட, விலைவாசியை கட்டுப்படுத்த, 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே வேட்பாளர் என்ற எண்ணத்தில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு மதுரை ஆதினம் பேசினார்.
இதன் போது, ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரஆல் இந்தியா வல்லரசாகும். 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே வேட்பாளர் என்ற எண்ணத்தில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் பேசினார்.
ஆன்மிக பணி செய்ய வேண்டிய மதுரை குருமகா சன்னிதானம் இன்றைக்கு இரட்டை இலை சின்னத்தை காட்டி ஓட்டு கேட்கிறது என்றால், அதற்கு காரணம் உள்ளது. இந்த நாட்டின் குடிமகன், ஒரு வாக்காளன் என்ற முறையில் எங்களுக்கும் சமுதாயத்தின் மேல் அக்கறை உள்ளது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் நன்றாக இருக்கும். சமூகத்தில் வாழும் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ முடியும். ஆனால் இன்றைக்கு சமூகம் பல்வேறு சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது.
நாட்டில் பயங்கரவாதம், தீவிரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கை, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்திய நாட்டை வெளிநாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்தும், சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்ற கூடிய திறனும், ஆளுமையும் உள்ள ஒரே தலைவி ஜெயலலிதா தான், ஜெயலலிதா பிரதமர் ஆனால் தான் இந்த நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும், வல்லரசாக ஆக்க முடியும் என்பதை உணர்ந்து தான் எங்களது சன்னிதானம் அ.தி.மு.க.வை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.
தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா பிரதமரானால் கச்சத்தீவை மீட்டெடுப்பார், இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்திய பாராளுமன்றத்திலும் நிறைவேற்றுவார். தமிழ் மொழி உயர்ந்த மொழி என்பதையும் நிலைநாட்டுவார். தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பார்,. நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும், நதிகளை தேசியமயமாக்குவார். விலைவாசியை கட்டுப்படுத்த கூடிய திறனும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கூடிய தெம்பும் அவருக்கு தான் உண்டு.
இந்திய நாடு வளம் பெற, வளர்ச்சி பெற, அமைதி நிலவ ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும், நாட்டை பாதுகாக்க, பொருளாதார சீர்குலைவை தடுக்க பயங்கர வாதம் ஒடுக்கப்பட, விலைவாசியை கட்டுப்படுத்த, 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே வேட்பாளர் என்ற எண்ணத்தில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு மதுரை ஆதினம் பேசினார்.
No comments:
Post a Comment