மு.க.அழகிரியுடன் பேசியது குறித்த விவரத்தை கனிமொழி வெளியிட்டுள்ளார்.
திமுக கட்சியிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்ட பிறது கனிமொழி அவரை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அழகிரியுடன் பேசியது தொடர்பாக கனிமொழி அளித்த பேட்டியில்,
கேள்வி: கடந்த வாரம் மு.க.அழகிரி உங்களை சந்தித்தார். அதன் நோக்கம் என்ன?
பதில்: அவர் ஒரு சகோதரராக என்னை வந்து சந்தித்தார்.
கேள்வி: கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி விவாதித்தாரா?
பதில்: உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார்.
கேள்வி: தேர்தல் கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகளை விட அதிமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
பதில்: தேர்தல் கருத்து கணிப்பில் முதலில் அதிமுகவுக்கு 39 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். பின்னர் அது 18 அல்லது 20 ஆக குறைந்தது. திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யத் தொடங்கியதும் அது மேலும் குறைந்து விடும்.
கேள்வி: 2 ஜிஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் திமுக முன்னாள் மத்திய மந்திரிகள் மீதும் புகார் கூறப்பட்டது. இதனால் இந்த தேர்தலில் திமுகவின் மதிப்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மை வெளியே வரும்.
இதில் திமுகவை மட்டும் ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள். பெங்களூர் விசேஷ கோர்ட்டில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்ன ஆச்சு? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்.
கேள்வி: திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வரர்கள், புதுமுகங்களாக இருக்கிறார்கள். பணத்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று திமுக நம்புகிறதா?
பதில்: அது தவறு. ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர் வேண்டுமானால் வசதி படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் எளிமையான பின்னணி கொண்டவர்கள். கட்சித் தலைமை அவர்களின் உழைப்பு, திறமையை எடை போட்டு வேட்பாளர்களாக தெரிவு செய்துள்ளது.
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாட்டில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?பதில்: இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இருமுறை இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது.
இப்போது மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இது எதைக்காட்டுகிறது. மத்திய அரசில் இருந்தபோது திமுகவின் நெருக்குதல் காரணமாக இருமுறை ஆதரித்த இந்தியா இப்போது மாறி இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் திமுக எப்போதும் போராடும்.
கேள்வி: நீங்கள் எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?
பதில்: தவறான நிர்வாகம், தமிழக அரசின் தோல்வி ஆகியவற்றை முன்நிறுத்தி பிரசாரம் செய்வேன். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 13 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையும் மின்சார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வர தயங்குகிறார்கள்.
கேள்வி: முந்தைய திமுக அரசின் தவறான செயல்பாடுகள் தான் தமிழ் நாட்டில் மின்சார பற்றாக் குறைக்கு காரணம் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில்: திமுக ஆட்சியில் பல புதிய திட்டங்களை கருணாநிதி தொடங்கினார். தற்போதைய ஆட்சியில் எந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று சொல்ல முடியுமா? கடந்த 3 ஆண்டுகளில் எந்த மின்சார திட்டமாவது முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா?
ஒரு அரசாங்கத்தின் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதிமுக அரசு முந்தைய திமுக அரசின் திட்டங்களையெல்லாம் நிறுத்தி வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
திமுக கட்சியிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்ட பிறது கனிமொழி அவரை சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அழகிரியுடன் பேசியது தொடர்பாக கனிமொழி அளித்த பேட்டியில்,
கேள்வி: கடந்த வாரம் மு.க.அழகிரி உங்களை சந்தித்தார். அதன் நோக்கம் என்ன?
பதில்: அவர் ஒரு சகோதரராக என்னை வந்து சந்தித்தார்.
கேள்வி: கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி விவாதித்தாரா?
பதில்: உடல்நலம் பற்றி மட்டுமே விசாரித்தார்.
கேள்வி: தேர்தல் கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகளை விட அதிமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
பதில்: தேர்தல் கருத்து கணிப்பில் முதலில் அதிமுகவுக்கு 39 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். பின்னர் அது 18 அல்லது 20 ஆக குறைந்தது. திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யத் தொடங்கியதும் அது மேலும் குறைந்து விடும்.
கேள்வி: 2 ஜிஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் திமுக முன்னாள் மத்திய மந்திரிகள் மீதும் புகார் கூறப்பட்டது. இதனால் இந்த தேர்தலில் திமுகவின் மதிப்பு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் உண்மை வெளியே வரும்.
இதில் திமுகவை மட்டும் ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள். பெங்களூர் விசேஷ கோர்ட்டில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்ன ஆச்சு? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்.
கேள்வி: திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வரர்கள், புதுமுகங்களாக இருக்கிறார்கள். பணத்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று திமுக நம்புகிறதா?
பதில்: அது தவறு. ஒன்று அல்லது இரண்டு வேட்பாளர் வேண்டுமானால் வசதி படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் எளிமையான பின்னணி கொண்டவர்கள். கட்சித் தலைமை அவர்களின் உழைப்பு, திறமையை எடை போட்டு வேட்பாளர்களாக தெரிவு செய்துள்ளது.
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாட்டில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?பதில்: இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இருமுறை இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது.
இப்போது மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இது எதைக்காட்டுகிறது. மத்திய அரசில் இருந்தபோது திமுகவின் நெருக்குதல் காரணமாக இருமுறை ஆதரித்த இந்தியா இப்போது மாறி இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் திமுக எப்போதும் போராடும்.
கேள்வி: நீங்கள் எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?
பதில்: தவறான நிர்வாகம், தமிழக அரசின் தோல்வி ஆகியவற்றை முன்நிறுத்தி பிரசாரம் செய்வேன். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 13 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையும் மின்சார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தமிழகத்துக்கு வர தயங்குகிறார்கள்.
கேள்வி: முந்தைய திமுக அரசின் தவறான செயல்பாடுகள் தான் தமிழ் நாட்டில் மின்சார பற்றாக் குறைக்கு காரணம் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில்: திமுக ஆட்சியில் பல புதிய திட்டங்களை கருணாநிதி தொடங்கினார். தற்போதைய ஆட்சியில் எந்த திட்டம் தொடங்கப்பட்டது என்று சொல்ல முடியுமா? கடந்த 3 ஆண்டுகளில் எந்த மின்சார திட்டமாவது முழுமையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா?
ஒரு அரசாங்கத்தின் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால் அதிமுக அரசு முந்தைய திமுக அரசின் திட்டங்களையெல்லாம் நிறுத்தி வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment