இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யபபட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளன.
அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தமது அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை சர்வதேச சமூகம் நிராகரிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது.
தமிழீழ இராச்சியத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய தமிழர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் தடையை திட்டவட்டமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யபபட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளன.
அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தமது அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை சர்வதேச சமூகம் நிராகரிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது.
தமிழீழ இராச்சியத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய தமிழர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் தடையை திட்டவட்டமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment