ஆர்யாவின் சேட்டை நேற்று தொடங்கியது. என்னடா இது என்று குழப்பமாக இருக்கிறதா? டெல்லி பெல்லி படத்தை தமிழில் ஆர்யாவை வைத்து ரீமேக் செய்கிறார்கள் அல்லவா. அந்தப் படத்துக்கு தற்காலிகமாக சேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விரைவில் பெயரை மாற்றும் எண்ணமிருக்கிறதாம் தயாரிப்பாளருக்கும், இயக்குனர் கண்ணனுக்கும்.
நேற்று சேட்டை படப்பிடிப்பு பின்னி மில்லில் தொடங்கியது. இவ்வளவு விரைவில் இந்தப் படம் தொடங்கப்படுவதற்கு ஆர்யாதான் காரணம் என்று கூறியிருக்கிறார் யு டிவி தனஞ்செயன். இந்தப் படத்துக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு பெயர் பரிசீலனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சேட்டையில் சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா, நாசர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment