சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் 'கலப்பு திருமணங்கள் செய்தால் நான் சும்மா விடமாட்டேன்' என வன்னிய சமுதாயத்தினரைப் பார்த்து எச்சரிக்கை விட்டார் வன்னியர் சங்கத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு. இந்த அறிவிப்பு யாரை அலற வைத்தோ இல்லையோ... மருத்துவரய்யா வீட்டு வாரிசு ஒருவரை பித்துப் பிடிக்காத குறையாகப் புலம்ப வைத்துவிட்டதாம். காரணம், மருத்துவரய்யாவின் பேரப்பிள்ளையான அந்த ஆண் வாரிசு நாயுடு சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து வருகிறார். அம்மாவிடம் பேசி காதலுக்கு சம்மதம் பெறலாம் என அந்த வாரிசு நினைத்திருந்த வேளையில்தான், காடுவெட்டியார் கலப்புத் திருமணங்களுக்கு எதிராக ஆவேசம் பாடியிருக்கிறார். அதனால், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முழிக்கிறார் மருத்துவரய்யா பேரன்.
சரி, விடுங்கள்... கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்!
No comments:
Post a Comment