போலீஸ் மீது வழக்குப் போட முடிவு!
தொடர் வழக்குகளை முறியடித்து ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். 11 - ம் தேதி மாலை திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்த நடராஜன் தஞ்சாவூருக்குச் செல்வார் என போலீஸ் எதிர்பார்த்தது. ஆனால், திருச்சி கே.கே.நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கினார் நடராஜன். தன்னை சந்திக்க வந்தப் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடராஜன், ''இப்போதைக்கு ஏதும் பேசும் நிலையில் நான் இல்லை. நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா? அரசியல் நிலவரங்கள் எப்படிப் போகின்றன?" எனக் கேட்டார். (சார் காமெடி ப ண்றாராம்) பத்திரிக்கையாளர்களை அனுப்பிவிட்டு தனது ஆதரவாளர்களிடம் பேசிய நடராஜன், தன் மீது பொய் வழக்குப் போட்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் போட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். (தைரியம் இருந்தா ஜெயலலிதா மேல வழக்குப் போட வேண்டியதுதானே...)
சசிகலாவின் தம்பி திவாகரன் ஏற்கனவே ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில், தற்போது நடராஜனும் வெளியே வந்திருக்கிறார். ஏற்கனவே ராவணனும் வெளியே வந்துவிட்டார். சசிகலாவுக்கும் அவருடைய உறவுகளுக்கும் இருந்த மனக்கசப்பு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதன் எதிரொலியாகவே அரசுத்தரப்பு கெடுபிடிகள் குறைக்கப்பட்டு உறவுகள் ஒவ்வொருவராக வெளியே வருவதாகவும் சொல்கிறார்கள்.
இதற்கிடையில் சசிகலா திடீரென கொடநாடு கிளம்பி இருக்கிறார். ஜெயலலிதா சென்னையில் இருக்க, சசிகலா மட்டும் கொடநாடு கிளம்பிப் போயிருப்பது உறவுகளை சமாதானம் செய்யத்தான் என்கிறார்கள் கோட்டை புள்ளிகள்.
- கும்பல்
நன்றி : கார்டூன் பாலா
No comments:
Post a Comment