பிரபுதேவா இயக்கிய வான்டட் சூப்பர்ஹிட். நூறு கோடிக்கு மேல் வசூல் செய்தது. அப்போதே சல்மான்கானுடன் மீண்டும் பிரபுதேவா இணைவார் எனக் கூறப்பட்டது.
ஐபில் தொடக்கவிழா நிகழ்ச்சியின் போது பிரபுதேவா, சல்மான் சந்தித்துப் பேசினார். இதோ... அந்தப் பேச்சுக்கான பலன் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
தற்போது அக்சய் நடிக்கும் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கிவரும் பிரபுதேவா அடுத்து சல்மான்கானை இயக்கப் போகிறார். ரவுடி ரத்தோர் வெளியாகும் போது அதிகாரபூர்வமாக இதனை அறிவிக்க இருக்கிறார்கள்.
ஹீரோயின் அனேகமாக கரீனா கபூராக இருப்பார். எந்தப் படத்தின் ரீமேக் அல்லது பிரபுதேவாவின் சொந்தக் கதையா என்பதெல்லாம் அறிவிப்பின் போது தெரிய வரும்.
No comments:
Post a Comment