காதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை.
பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர்ட்டில் லேண்டான இவரையும், இவரது மேனேஜரையும் அதிகாரிகள் தனித்தனியே விசாரித்தார்கள். நயன்தாரா 20 லட்ச ரூபாயுடன் பாங்காக்கிலிருந்து வந்ததாக சந்தேகப்பட்டு இந்த விசாரணை நடத்தப்பட்டது என்கிறக்ர்கள்.
இன்னும் சிலர் தனது கையில் பிரபு என்று குத்தியிருந்த டாட்டூவை அழிப்பதற்குதான் நயன்தாரா பாங்காக் சென்றார் என கிசுகிசுக்கிறார்கள்.
பிரச்சனை என்னவென்றால் இரண்டு செய்திகளும் நயன்தாராவை எட்டியுள்ளன. மீடியாதான் இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதுகிறது, அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆத்திரத்துடன் கூறியிருக்கிறக்ர் நயன்தாரா.
நிஜம்தானே.
No comments:
Post a Comment