ஜெயம் ரவி அடுத்து கல்யாண் என்பவர் இயக்கும் பூலோகம் படத்தில் நடிக்கிறார். தயாரிப்பு ஆஸ்கர் பிலிம்ஸ். இந்தப் படத்தில் அமலா பால் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. பிறகு நயன்தாரா.
இப்போது அவரும் இல்லை என்கிறது ஆஸ்கர் வட்டாரம்.
ஆஸ்கர் பிலிம்ஸின் அதிரடி மாற்றங்களை ஏன் எதற்கு என்று கேட்க முடியாது. முதல் கேள்விக்கு பதில் வரும் முன் அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்து முடிந்திருக்கும். நயன்தாரா ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கு ஊகங்கள்தான் உலவுகிறதே தவிர அதிகாரபூர்வ செய்தியில்லை.
நயனுக்குப் பதில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை நீங்கள் படிக்கும் போது த்ரிஷா அட்வான்ஸ் வாங்கியிருக்கலாம் இல்லை அவரும் நீக்கப்பட்டு வேறெhருவர் உள்ளே வந்திருக்கலாம். ஆஸ்கரின் சுறுசுறுப்பு அப்படி.
No comments:
Post a Comment