பாடகராக இருந்த கார்த்திக்கை அரவான் இசையமைப்பாளராக்கியது. பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டது கார்த்திக்கிற்கு பிளஸ்ஸாக அமைந்தது. இப்போது அடுத்தப் படத்துக்கு கார்த்திக் தயார்.
கௌதம் தயாரிப்பில் பிரேம் சாய் இயக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஜெய், அபிநயா நடிக்கிறார்கள். படங்களின் வியாபார வேல்யூவை அதிகப்படுத்தும் சந்தானமும் படத்திலுண்டு. அவருடன் விடிவி கணேஷும் கலக்கயிருக்கிறார்.
இந்தப் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்தப் பாகங்களை உருவாக்கயிருப்பதாக பிரேம் சாய் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment