கடல் படத்தில் தனது ரீஎண்ட்ரியை பதிவு செய்திருக்கும் அரவிந்தசாமி அடுத்து அஜீத் படத்தில் நடிக்கிறார்.
ரோஜா படத்தில் பீக்கில் இருந்த சாமி பிசினஸில் கவனம் செலுத்தியதால் சினிமாவை கண்டுகொள்ளவில்லை. லைம் லைட்டில் இருந்தவர் அவராகவே விரும்பி அந்த வெளிச்சத்திலிருந்து விலகிக் கொண்டார். இப்போது முடி கொட்டிப் போய், குண்டான அங்கிள் தோற்றத்தில் மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து விஷணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாதப் படத்தில் சாமி நடிக்கிறார். இந்தப் படத்தில் ஆர்யா, நயன்தாரா, தாப்ஸீ என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அத்துடன் அரவிந்தசாமி, பிருத்விராஜ் ஆகியோரும் நடிக்கிறார்களாம்.
யுவன் படத்துக்கு இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment