![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhID2QJ_Rw4vlk9yBr7HizfR_ffaVQ7QAlio-YfXkDIyquGO3XiV9DtbzXmupweIpvy7lvUq-sJDUJcjKpWpHka7e-S4LCDIR6kKcdi3LIJkKhqDrkkZyLFstIi1c8ZJuf9rUXq43MBI6mj/s200/seeman.bmp)
21வது ஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று கண் காட்சியின் ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படு கொலைப் போரில் 1 1/2 லட்சம் மக்களை கொன்று குவித்த அந்நாட்டு அரசு தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழ் மண்ணில் நடைபெறும் கண் காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிப்பது என்பது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாகும்.
எனவே சென்னை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து வரும் எந்த நிறுவனத்தையும் சென்னைக் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களும் இந்த கண் காட்சியில் இடம் பெற செய்யவும் அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
எங்களின் வேண்டுகோளையும் மீறி, இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களோ அல்லது பொருட்களோ பங்கு பெற அனுமதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment