![](http://1.bp.blogspot.com/-29yljlwp2H4/TzqoL-RhoUI/AAAAAAAAA80/Q8aGjilu-UQ/s200/war.jpg)
இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை வகைப்படுத்த வேண்டும். பொறுப்பு கூற வேண்டியவர்களிற்கு வெவ்வேறு கடமைகள் உள்ளது.
1. இலங்கை அரசாங்கம்
2. இந்திய அரசாங்கம்
3. நோர்வே அரசாங்கம்
4. ஐக்கிய நாடுகள் சபை
5. தமிழ் மக்கள்
2009ம் ஆண்டு அழிவுகளிற்கு பின்பு இன்று தமிழ் மக்கள் பல ஆலயங்களில் கோபுரங்களைக் கட்டுகின்றனர். பல கட்டடங்களை வானுயரக்கட்டுகின்றனர். ஆனால் இறந்த மக்களிற்காக ஒரு நடுகல்லினை இட முடியாத நிலையிலேயே உள்ளனர்.
மனிதநேயத்தினை மேம்படுத்த நேர்மையான நடவடிக்கைகள் மிகவும் இன்றியமையாதது. யுத்த அழிவுகளை யாரும் மறுப்பினும் விஞ்ஞான ஆதாரங்களை எவரும் நிராகரிக்க முடியாது.
2009ம் ஆண்டு நிகழ்ந்த அழிவுகளை ஒவ்வொரு கணமாக செய்மதிகள் படங்கள் எடுத்து உள்ளன. இன்று எமது வீட்டின் கூரையினை மாற்றினால் கூட Google Earth மூலம் எமது வீட்டில் இருந்தே அதன் படத்தினை செய்மதி மூலம் அறியலாம்.
ஆயின் 2009ம் ஆண்டு எமக்கு ஏற்பட்ட அழிவுகளிற்கான செய்மதிப் படங்கள், மற்றும் நேரடியாக குறிப்பாக கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட படங்கள், மக்களின் காட்சிகள் என்பன 2009ம் ஆண்டு அழிவுகளை மீளக்காட்சிப்படுத்த உதவும்.
அடுத்து 2009ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட இணைய வலைப்பின்னல் தகவல்கள் (விக்கிலீக்ஸ் உட்பட) எமக்கு ஏற்ட்ட அழிவுகளுக்கு ஆதாரம். அடுத்து யுத்தத்தின் செய்திகளான எறிகணைவீச்சு, விமானக்குண்டு வீச்சு என்பனவற்றின் சிதறல்களும், மண் துணிக்கைகளும் உயிரிழந்த மக்கள் உட்பட ஏனைய மக்களின் நுரையீரலில் கிரமமாகப் படிந்து உள்ளது.
இவற்றினை நாம் எந்த நாட்டின் குண்டு, எப்போது தயரிக்கப்பட்டது என்று கூட நானே தொழில்நுட்பம் மூலம் கண்டறியலாம். இவை உண்மையில் இந்திய பாகிஸ்தான் எல்லை, மற்றும் இந்திய சீனா எல்லையில் உபயோகிக்க முடியாது கழிக்கப்பட்ட குண்டுகளாகவே இருக்கும்.
அமெரிக்காவில் பிரபல நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகளின் மனநிலை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் நிபுணர் போல்பபியக் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரிட்டிஸ் பொலம்பியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த உளவியல் நிபுணர் பாப்ஹரெ உம் இணைந்து 111 கேள்விகள் அடங்கிய வினாக்கொத்து தயாரிக்கப்பட்டது.
இதன் மூலம் பிரபல நிறுவனங்களின் தலைவர், தலைமை அதிகாரிகள் மற்றும் உயர்பதவியில் (Staff level) உள்வர்களில் உளநோய் உள்ள தன்மை 100பேரில் நால்வருக்கு உள்ளது எனவும் சாதாரண மக்களில் 100 பேரில் ஒருவருக்கு இந்நிலை ஏற்படுகின்றது எனவும் கண்டறியப்பட்டது.
ஆயின் இலங்கையில் இந்நிலை மிகவும் அதிகமாக இருக்கும். இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளிடைளே இவ்வினாக்கொத்து அளிக்கப்பட்டு அவர்களின் உண்மையான மனநிலையினை நிச்சியம் அளவிடவேண்டும்.
இலங்கைக்கு வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் இலங்கை யுத்தத்திற்கு பின்பான நிலை, யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பான பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளுகின்றனர். உண்மையில் 2009ஆண்டில் தமிழ் மக்கள் மீது பாரிய இனப்படுகொலை நிகழ்ந்தது.
இதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் அதனை மறுதலிப்பவர்களின் மனநிலையினை நாம் முதலில் மேற்படி ஆய்வு வினாக்கொத்து மூலம் அறியலாம். அடுத்து ஒருவர் உண்மையினை பேசுகின்றாரோ அல்லது பொய்யினைக் கூறுகின்றாரோ என்பதனை Biofeedback Mechine (உயிர்பின்னூட்டல் பொறி) மூலம் அறியலாம்.
நவீன விஞ்ஞான வளர்ச்சியில் தனிமனிதனது நடத்தை வேறுபாடே ஒரு இனத்திற்கு பாரிய அழிவினை ஏற்படுத்தலாம்.
Schizoid personality, உளப்பிளவைக் குணாம்சம் Hypomanic personality, மீள்எழுச்சி குணாம்சம் Paranoid personality, சந்தேகக் குணாம்சம் Sadistic personality, துன்புறுத்தும் குணாம்சம் Authertorient personality, அதிகாரக் குணாம்சம் Depressive, சோர்ந்த குணாம்சம் Hysterical personality வசிகரப் பேச்சுக் குணாம்சம் என்பன பொதுவாக எம்மிடையே காணப்படும் நடத்தை வேறுபாடுகள்.
பாரிய யுத்த அழிவுகள் ஏற்பட்ட சூழலில் இத்தகைய பிறழ்வு நடத்தைகள் மக்களை விட அவர்களை நிர்வகிப்பவர்களிடையே அதிகம் காணப்படும் போது அதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
இவை எமது பிரச்சினையில் வெளிநாட்டு இராஜதந்திர ஆதரவு (Exo) இன்றியமையாது என்பதை விஞ்ஞான பூர்வமாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.
20ம் நூற்றாண்டில் யூதஇனஅழிப்பு, மருத்துவஉலகிற்கு (Nacistic personality) நாசிகக் குணாம்சம் என்ன என்பதனை வரையறை செய்ததோ அவ்வாறே 21ம் நூற்றாண்டில் தமிழின அழிப்பு, மருத்துவ உலகிற்கு Singhala personality (சிங்களக் குணாம்சம்) என்ன என்பதனை எடுத்துக்காட்டி உள்ளது.
இதனை ஜெனிவாவில் நடைபெறும் மனிதஉரிமை மகாநாட்டில் இலங்கை எதிர்கொள்ளும் விதத்தில் இருந்து அடிப்படை விஞ்ஞான அறிவுடையவர்கள் புரிந்து கொள்ளலாம்.
மேலும் எமது அரசியல் சிக்கல் நிலையினை தீர்க்க பல பரிமாணங்களில் அணுகல் வேண்டும்.
அவையாவன.
1. ஐனநாயகத்தினை மீள நிறுத்தல். 1977ம் ஆண்டிற்கு பின் வடக்கு கிழக்கில் ஆயுதமுனை அற்ற தேர்தல்கள் இல்லை. 1989ம் ஆண்டில் இருந்து வடமாகாணசபை செயற்படவில்லை.
2. இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்படல்.
3. யுத்தக்குற்றம் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பாக வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும், நீதி விசாரணையும் நடைபெறவேண்டும்.
4. நிரந்தர அரசியல் தீர்வினை அளித்தல்.
5. பாதிக்கப்பட்டவர்களிற்கு புனர்வாழ்வு அளிக்கப்படல் வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படல் வேண்டும்.
6. சமூகக்கட்டமைப்புக்கள் மீளக்கட்டி எழுப்பப்படல்வேண்டும்.
Dr.C.S. யமுனானந்தா
No comments:
Post a Comment