![](http://3.bp.blogspot.com/-g_1vH_87xFc/TiFC5XY-SKI/AAAAAAAAAxc/l1kI4wweRDA/s200/imagesCA64A11O.jpg)
இந்த உலகத்தில் விடுதலைக்காக,மிக அதிக விலை கொடுத்த இனம் தமிழ் இனம் ஒன்று மட்டும் தான் இருக்கமுடியும் ,சரி... கொடுத்த விலைகள்,உலகில் மனித உரிமை,ஜனநாயகம் பேசும் வல்லரசுக்கும்,ஐக்கிய நாடுகளின் சபைக்கும் போதாதா?எங்கள் தமிழீழத்தில் சுதந்திர போராட்டத்தில் எழவு விழுகாத வீடு என்று எதுவும் இருந்தால் அது பெரிய அதிசயம் தான்.
வெலிக்கடை சிறையில் தொடங்கிய 1983 ஆம் ஆண்டு கலவரமும் பலி கொடுத்த உயிர்களும் ஆவணப்படுத்த மறந்தோம், செம்மணி புதைகுழியை மறந்தோம்,......கண் முன்னே ஆவணப்படுத்திய போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கைகள் எதுவும் நம்பிக்கை தருவதாக இல்லை...மனிதாபிமானம் பேசும் அரசுகளுக்கு என்னை வயல்களும்,வணிக முக்கியத்துவமும் இருந்தால் மட்டும் தான் கண் தெரியும் போல இருக்கிறது.அவர்கள் அன்னியர்கள் சற்று தாமதித்தாலும் தவறில்லை,அவர்கள் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறார்கள்.ஆனால் இங்கே தமிழீழத்தில் இருந்து தொட்டு விடும் தூரம் வெறும் 18 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் என் தமிழ் தாயகமே தற்க்குரிகளின் பிடியிலும்,சுய நல பிசாசுகளின் பிடியிலும் நீ இருக்கிற காரணத்தால்,எங்கள் கண்ணீர் இன்றும் நின்ற பாடில்லை,தேர்தல் தோறும் எங்களது சாவுகள் தமிழ்நாட்டு அரசியலுக்கு உரமாகத்தானே பயன் பட்டது,இதோ இன்று இந்தோனேசிய கடலில் உன் பிள்ளைகள் 87 பெர்கடலில் நியுசிலாந்தில் அகதிகளாக வேண்டி போராடுகிற செய்தி உனக்கு தெரியுமா?தமிழ்நாட்டு பத்திரிக்கைகள்,ஏதாவது எழுதியதா?ஏன் எழுதவில்லை என்று யாராவது கேட்டீர்களா?கோதாவரி பஞ்சத்தில் வந்த தெலுங்கனுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த தமிழ் இனம், கிருஷ்ணா தேவராயனின் படைக்கு பயந்து வந்த புலிகேசிகளுக்கும் ஆதரவு கொடுத்து வாழவைத்த தமிழ் இனம்,வெள்ளைக்காரனுக்கு முன்பே,ரோமாபுரியிலும் கிரேக்கத்திலும் வாணிபம் செய்த தமிழன்,கடாரம் வென்ற தமிழன்,ஜாவா சுமத்திராவை ஆண்ட தமிழன்,இன்று உயிருக்கு அகதியாய் வாழ தஞ்சம் கேட்டு போராடுகிறான்.
என்ன ஆனது அந்த மாட்சிமை பொங்கிய வரலாற்றின் செறிவுகள்,ஏன் தோற்றோம்,எதற்க்காக இந்த அவல நிலை,ஏ....எட்டு கோடி தமிழ் நாட்டு தமிழ் இனமே உன் பாராமுகம் நியாயம் தானா?உனக்கென்ன தமிழ் இனத்துரோகி திருடன் கருணாநிதியை பதவியை விட்டு துரத்தியவுடன் கடமை முடிந்தது என்று முடித்துவிட்டாயா,முள்ளிவாய்க்களில் கொடுக்க தொடங்கிய உயிர் பலிகள் இன்னும் முடியவில்லை என்பது உனக்கு தெரியுமா?இங்கே நடக்கின்ற வெள்ளை வேன் கடத்தல்கள் உனக்கு தெரியுமா,மர்ம சாவுகள் தெரியுமா,சரி விட்டு விடு இந்திய தீபகற்ப்பத்தின் ஒரே சர்வதேச இனம் நீ மட்டும் தான் என்ற உணர்வு,கொஞ்சமாவது உனக்கு இருக்கிறதா,விளைவுகளை பற்றி கொஞ்சமாவது சிந்தித்தாயா.
சர்வதேச அரசியலின் போக்கு சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் முறுகல் நிலையினை எதிர்கொள்கிறதே சிங்களன் மத அடிப்படையில் சீனனோடு கைகோர்க்கிறானே,கச்ச்சத்தீவிலே சீனன் உட்கார்ந்து விட்டானே.சிங்களன் இப்போது ஐக்கிய நாடுகளின் சபையில் வீடோ அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் சீனாவோடு இணைந்து செயல்படுவது தான் நல்லது என்று சீன சார்பு நிலை எடுத்து விட்டானே,சீனன் கச்சத்தீவில் அமைக்கும் தளத்தில் இருந்து ,தாக்குதலுக்கு இலக்காவது தமிழ்நாடுதானே,டில்லிக்காரனுக்கு தமிழனின் குரல் எப்போதும் பிடிக்காது இந்த உண்மை உனக்கு தெரியாதா?விழித்தெழு....தமிழா...விழித்தெழு தமிழ்நாட்டு தமிழா துயில் எழு......... கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் இன்றைய முதல் அமைச்சர்,செல்வி ஜெயலலிதா அவர்கள்,சொன்ன தேர்தல் வாக்குறுதியில் சுதந்திர தமிழீழம் ஒன்றே தமிழீழ மக்களுக்கு தீர்வு என்று சொன்னார்.அய்யா தமிழ்நாட்டு தமிழர்களே,உலகத்தமிழர்களே அம்மையார் ஜெயலலிதாவுக்கு அதை நினைவுபடுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்க கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இதுவே சரியான நேரம்...செய்வீர்களா நண்பர்களே?
எம்மை பற்றி கவலை இல்லை எம்மை வழி நடத்த எங்கள் தலைவன் இருக்கிறான்,எங்களுக்குள்ளே இருந்த துரோகிகளும் ,புல்லுருவிகளும்,அடையாளம் கண்டுவிட்டோம்.இனி வரும் காலம் தமிழீழத்தின் காலம்,அது எங்கள் பொற்காலம்,ஓயாத அலைகள் நடவடிக்கையில் 30000 சிங்களராணுவத்துக்கு உயிர் பிச்சை கொடுத்த புலிகள்,உலகத்தில் அயோக்கியர்கள் எம்மை பயங்கரவாதிகள் என்று சொன்னபோதும்,ஐக்கிய நாடுகளின் சபையின் போர்க்குற்ற விசாரணை ஆணைய அறிக்கையில் குறிப்பிட்ட படி,உலகத்தின் தலை சிறந்த ,கட்டுப்பாடு மிகுந்த,ஒழுக்கமான இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள்,பாய்வதற்காக பதுங்கிக்கொண்டிருக்கும் தானைத் தலைவன் அறிவிப்புக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.தலைவனின் அஞ்ஞான வாசம் முடியும் போது,தமிழீழ தமிழ் இனம்,துரோகிகள் இன்றி இருக்கும்,மவுனித்த ஆயுதங்கள் முழங்கும், ஓயாத அலைகள் 5 சுதந்திர தமிழீழம் அமைக்கும்,சுதந்திர தமிழீழம் தான் தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பு அரண் என்ற உண்மை தமிழ்நாட்டு தமிழனுக்கு அப்போது தான் புரியும்.
No comments:
Post a Comment