எதிர்வரும் யூலை 3ம் நாள் ஞாயிற்றுக்கிழமை, Parc Départemental de le Cournuve - Dugny / Le Bourget எனும் இடத்தில் இடம்பெறும் தமிழர் விளையாட்டு விழாவிலேயே இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ தேசிய அட்டைகளுக்குரிய பதிவுகள் செய்யப்படவுள்ளதோடு, பிரான்சில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் விவகாரங்களுக்கான மனிதாபிமான மையமும் மக்கள் தொடர்பு மையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்-பிரான்ஸ் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்-பிரான்ஸ் ஆகியன கூட்டிணைவாக நடாத்தும் 14வது தமிழர் விளையாட்டு விழா குறித்து, நா.த.அரசாங்கத்தின் கலாசாரம்-விளையாட்டு- உடல்நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகெலாம் பரவி வாழும் உலகத் தமிழ் மக்கள், ஆண்டில் ஒருநாள் கூடிக் குதூகலித்து கொண்டாடும் நாளென குறிப்பிட்டிருப்பதோடு, தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுக்கள் புலத்திலும், சந்ததி சந்ததியாக தொடர இத்தகைய விளையாட்டு விழாக்கள் காலத்தின் தேவையென துணைப் பிரதமரும் - அமைச்சருமாகிய ராம் சிவலிங்கம் அவர்கள் வாழ்த்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை
No comments:
Post a Comment